புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
குஜராத்தின் ஜாம்நகரில் நடந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் மூன்று நாள் திருமணத்திற்கு முந்தைய விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் நிகழ்வான, நேற்று (மார்ச் 2) மாலை நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான், கருப்பு குர்தா, ஜாக்கெட் மற்றும் பைஜாமா அணிந்து மேடைக்கு வந்தார். அப்போது அவர் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் ‛ஜெய் ஸ்ரீராம்' எனக் கூறி தனது பேச்சை துவக்கினார்
தொடர்ந்து அவர் பேசுகையில், ‛‛கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார். நடன நிகழ்ச்சிகளைப் பார்த்திருப்பீர்கள். சகோதர - சகோதரிகள் நடனமாடினார்கள். ஆனால், பிரார்த்தனைகளும் ஆசீர்வாதங்களும் இல்லாமல் ஒருவர் வாழ்வில் முன்னேற முடியாது. எனவே, அம்பானி குடும்பத்தின் சக்திமிக்க பெண்கள் எனப்படும், குடும்பத்தின் மூன்று தேவியரை (சரஸ்வதி, லட்சுமி மற்றும் பார்வதி) அனைவருக்கும் அறிமுகப்படுத்த ஒரு கணம் ஒதுக்குகிறேன். அவர்களின் பிரார்த்தனைகளும் ஆசீர்வாதங்களும் இந்த குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்கின்றன'' எனக் கூறி கோகிலாபென் அம்பானி, பூர்ணிமா தலால் மற்றும் தேவயானி கிம்ஜி ஆகியோரை அறிமுகப்படுத்தி ராதிகா மற்றும் ஆனந்த் ஆகியோரை ஆசீர்வாதம் செய்ய வைத்தார்.