விஜய் உடன் லிப்டில் எடுத்த ‛மிரர் செல்பி': போட்டோ பகிர்ந்து வாழ்த்திய திரிஷா | விவசாயி என்ற வார்த்தையே பவர்புல்: ‛உழவர்களின் தோழன்' விருது பெற்ற சிவகார்த்திகேயன் | ஜூன் 25ல் வெளியாகிறது ‛இந்தியன்-2' டிரைலர் | பிடிகொடுக்காமல் நழுவும் பாணா காத்தாடி | மகனுக்காக பைனான்ஸ் உதவி செய்யும் அப்பா நடிகர் | சூர்யா 44 படத்தில் இணைந்த மலையாள நடிகர்! | டி.என்.ஏ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | இளையராஜாவிடம் கற்றுக்கொண்டவை: கார்த்திக் ராஜா சிறப்பு பேட்டி | புறக்கணிப்புகளை புறந்தள்ளி சாதிக்கும் சவுந்தர்யா நஞ்சுந்தன் | தெலுங்கிலும் லாபத்தைக் கொடுத்த 'மகாராஜா' |
குஜராத்தின் ஜாம்நகரில் நடந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் மூன்று நாள் திருமணத்திற்கு முந்தைய விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் நிகழ்வான, நேற்று (மார்ச் 2) மாலை நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான், கருப்பு குர்தா, ஜாக்கெட் மற்றும் பைஜாமா அணிந்து மேடைக்கு வந்தார். அப்போது அவர் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் ‛ஜெய் ஸ்ரீராம்' எனக் கூறி தனது பேச்சை துவக்கினார்
தொடர்ந்து அவர் பேசுகையில், ‛‛கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார். நடன நிகழ்ச்சிகளைப் பார்த்திருப்பீர்கள். சகோதர - சகோதரிகள் நடனமாடினார்கள். ஆனால், பிரார்த்தனைகளும் ஆசீர்வாதங்களும் இல்லாமல் ஒருவர் வாழ்வில் முன்னேற முடியாது. எனவே, அம்பானி குடும்பத்தின் சக்திமிக்க பெண்கள் எனப்படும், குடும்பத்தின் மூன்று தேவியரை (சரஸ்வதி, லட்சுமி மற்றும் பார்வதி) அனைவருக்கும் அறிமுகப்படுத்த ஒரு கணம் ஒதுக்குகிறேன். அவர்களின் பிரார்த்தனைகளும் ஆசீர்வாதங்களும் இந்த குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்கின்றன'' எனக் கூறி கோகிலாபென் அம்பானி, பூர்ணிமா தலால் மற்றும் தேவயானி கிம்ஜி ஆகியோரை அறிமுகப்படுத்தி ராதிகா மற்றும் ஆனந்த் ஆகியோரை ஆசீர்வாதம் செய்ய வைத்தார்.