பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி |

ரஜினிக்கு சென்னை போயஸ் கார்டனில் வீடு உள்ளது. இதுதவிர கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரையிலும், தாம்பரத்தை அடுத்த படப்பையிலும், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கேளம்பாக்கத்திலும நிலம், பண்ணை வீடுகள் உள்ளன.
இந்த நிலையில் தற்போது சிறுசேரி மென்பொருள் பூங்கா அருகில் நாவலூரில் ஓ.எம்.ஆர். சாலையில் இருந்து தாழம்பூர் செல்லும் சாலையில் ஒரு நிலத்தை வாங்கி உள்ளார் ரஜினி. இந்த இடத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக நேற்று காலை திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். ரஜினி வருகையை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 9.45 மணிக்கு வந்த ரஜினியை பதிவுத்துறை செங்கல்பட்டு மண்டல டி.ஐ.ஜி ராஜ்குமார், மாவட்ட பதிவாளர் அறிவழகன், திருப்போரூர் சார்பதிவாளர் சக்திபிரகாஷ் வரவேற்றனர்.
பதிவுத்துறை அலுவலர்கள் ரஜினியை புகைப்படம் எடுத்து பயோமெட்ரிக் கைரேகை பதிவு செய்தனர். 12 ஏக்கர் இடம் வாங்கியுள்ளதாகவும், மொத்தம் 6 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பத்திரபதிவு முடிந்து 10.30 மணிக்கு ரஜினி புறப்பட்டு சென்றார். ரஜினி வருகையை அறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அவர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் கையசைத்தபடி சென்றார் ரஜினி.
நடிகர் தனியாக ஒரு மருத்துவமனை கட்ட இருப்பதாகவும், இதில் ஏழைகளுக்கு இலவசம், வசதி படைத்தவர்களுக்கு கட்டணம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் இதனை அவர் நடத்த இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.