இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலிவுட்டின் பிரபல நடிகையான தீபிகா படுகோனே தான் தாய்மை அடைந்திருப்பதாக கணவர் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து அறிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகளின் ஆடைகளைப் பகிர்ந்து 'செப்டம்பர் 2024' என்று குறிப்பிட்டு தீபிகா, ரன்வீர் எனப் பதிவிட்டுள்ளார். அவரது பதிவை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதற்குள் லைக் செய்துள்ளனர். சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
இந்திய அணியின் பாட்மின்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவின் மகள் தீபிகா படுகோனே. கொங்கணியைத் தாய் மொழியாகக் கொண்ட தீபிகா டென்மார்க்கில் பிறந்து பெங்களூருவில் படித்து வளர்ந்தவர். சோப் விளம்பரப் படத்தில் நடித்து பிரபலமடைந்த தீபிகா பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.
முதலில் கன்னடப் படத்தில் அறிமுகமாகி பின் 2007ம் ஆண்டு 'ஓம் சாந்தி ஓம்' ஹிந்திப் படத்தில் நடித்து பிரபலமாகி பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தன்னுடன் நடித்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கைக் காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தாய்மை அடைந்துள்ளார்.