ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக உருவாகியுள்ள 'ஆடுஜீவிதம்' வரும் மார்ச் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 30 வருடங்கள் கழித்து மீண்டும் மலையாள திரையுலகில் இந்த படத்தின் மூலம் ஏ.ஆர் ரஹ்மான் மறுபிரவேசம் செய்துள்ளார். கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.
எழுத்தாளர் பென்யமின் என்பவர் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற நாவலை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இதன் புரோமோஷன் நிகழ்ச்சிகளும் துவங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக ஆடுஜீவிதம் படத்திற்கான வெப்சைட்டை தொடங்கியுள்ளனர். இதன் துவக்க விழா நிகழ்வின் கலந்து கொண்டு இந்த வெப்சைட்டை துவங்கி வைத்தார் ஏ.ஆர் ரஹ்மான்.
அப்போது அவர் பேசும்போது, “மலையாளத்தில் யோதா படத்திற்கு பிறகு 30 வருடங்கள் கழித்து மீண்டும் திரும்பி உள்ளேன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பஹத் பாசில் நடித்த மலையான் குஞ்சு என்கிற படத்திற்கு இசையமைத்து இருந்தேன். ஆனாலும், ஒரு இசையமைப்பாளருக்கான படம் என்றால் அது ஆடு ஜீவிதம் படம் தான். அந்த அளவிற்கு படம் முழுவதுமே இசைக்கு வேலை வைக்கும் விதமாக உணர்வுபூர்வமான காட்சிகள் அதிகம்” என்று கூறியுள்ளார்.




