பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

மாமன்னன் படத்தை அடுத்து வாழை என்ற படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். அதையடுத்து விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்திற்காக கடந்த சில மாதங்களாகவே கபடி பயிற்சி எடுத்து வருகிறார் துருவ் விக்ரம். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மார்ச் 15 ஆம் தேதி முதல் தூத்துக்குடியில் தொடங்க உள்ளது. இந்த படத்தை 80 நாட்களில் படமாக்கி முடிக்கவும் மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், மலையாளத்தில் வெளியான ஜெய ஜெய ஜெய ஜெயஹே என்ற படத்தில் நாயகியாக நடித்த தர்ஷனா ராஜேந்திரன் என்பவர் இப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவர் தமிழில் கவண், இரும்புத்திரை ஆகிய படங்களில் நடித்துள்ளார். விரைவில் இப்படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் வெளியாக உள்ளது.