அஜித்தின் விடாமுயற்சியை முந்திய தண்டேல்! | பிப். 11ல் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட இசை வெளியீட்டு விழா! | ‛விடாமுயற்சி' இடைவேளையில் திரையிடப்படும் ஜி.வி.பிரகாஷின் ‛கிங்ஸ்டன்' டீசர் | பிப்-20ல் வெளியாகும் பிரியாமணி மலையாள படம் | எனக்கு அரெஸ்ட் வாரண்டா ? பொய் பரப்புவோர் மீது சோனு சூட் காட்டம் | ஆஸ்தான நடிகரையும் மோகன்லால் படத்தில் இணைத்துக் கொண்ட ஆவேசம் இயக்குனர் | வேட்டையன் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தேன் ; மலையாள நடிகர் அலான்சியர் லே | பிரதமர் மோடிக்கு நடன பொம்மைகளை பரிசளித்த நாகசைதன்யா - சோபிதா தம்பதி | தமிழில் வெப் தொடர் அறிமுகமாகிறார் ஜான்வி கபூர்! | போர் தொழில் இயக்குனரின் கதையில் அசோக் செல்வன்! |
மாமன்னன் படத்தை அடுத்து வாழை என்ற படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். அதையடுத்து விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்திற்காக கடந்த சில மாதங்களாகவே கபடி பயிற்சி எடுத்து வருகிறார் துருவ் விக்ரம். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மார்ச் 15 ஆம் தேதி முதல் தூத்துக்குடியில் தொடங்க உள்ளது. இந்த படத்தை 80 நாட்களில் படமாக்கி முடிக்கவும் மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், மலையாளத்தில் வெளியான ஜெய ஜெய ஜெய ஜெயஹே என்ற படத்தில் நாயகியாக நடித்த தர்ஷனா ராஜேந்திரன் என்பவர் இப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவர் தமிழில் கவண், இரும்புத்திரை ஆகிய படங்களில் நடித்துள்ளார். விரைவில் இப்படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் வெளியாக உள்ளது.