சாணம் அள்ளிய கையில் தேசிய விருது: 'இட்லி கடை' அனுபவம் பகிர்ந்த நித்யா மேனன் | இப்ப, முருகன் சீசன் நடக்குது: இயக்குனர் வி.சேகர் | நடிகர் கார்த்தி கொடுத்த விருந்து: 'ஐ லவ் யூ' சொல்லி நெகிழ்ச்சி | சென்ட்ரல் பட விழாவில் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் நினைவுகள் | தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திருமணங்கள்: கெட்டிமேள சத்தம் கேட்கப்போகுது | மேக்கப் குறித்து சரோஜாதேவி சொன்னது: இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் புதுதகவல் | என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி |
கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் அறிமுகமானவர் சமந்தா. அந்த படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவரை அப்படத்தின் தெலுங்கு பதிப்பில் ஹீரோயினாக நடிக்க வைத்தார் கவுதம் மேனன். இந்த நிலையில், விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளியாகி பிப்ரவரி 26ம் தேதியான இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனால், சமந்தா திரையுலகிற்கு வந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டிங் செய்து கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்த நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஒரு வாழ்த்து தெரிவித்திருக்கிறார், அதில், 14 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள், உங்களுக்கு(சமந்தா) நிறைய ஆற்றல் கிடைக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார். அதற்கு, நன்றி என் அழகியே என பதில் கொடுத்திருக்கிறார் சமந்தா.