ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஹிந்தியில் தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பக்னானியை காதலித்து வந்தார். இவர்களது திருமணம் பிப்., 21ல் கோவாவில் கோலாகலமாக நடந்தது. இதில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். மணமக்களுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில், ‛‛திருமணத்திற்கு என்னை அழைத்தமைக்கு நன்றி. ரகுலும், ஜாக்கியும் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் பயணத்தைத் தொடங்குகின்றனர். இந்த தருணத்தில் அவர்களின் திருமணத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லா சூழலிலும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து, கனவுகளையும், ஆசைகளையும் நனவாக்கும் தேடலில் ஒருவரது கைகளை மற்றொருவர் பற்றிக் கொண்டும், அன்புடன் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டும், குறைகளை ஆமோதித்து, நல்லனவற்றை கற்றுக் கொள்ளும் பயணமாக அமையட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் வாழ்த்து கடிதத்தை வெளியிட்டு, ரகுல், ஜாக்கி இருவரும் தங்களது நன்றியை பிரதமருக்கு தெரிவித்துள்ளனர். அதோடு இந்த கடிதத்தை பிரேம் செய்து வைத்துக் கொள்வோம் என தெரிவித்துள்ளனர்.