இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனின் 233வது படத்தை வினோத் இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர். பல கட்டமாக இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று, தற்போது கமலை வைத்து வினோத் இயக்கும் படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனால் நடிகர் தனுஷின் புதிய படத்தை இயக்குவதற்கான பணிகளை மீண்டும் வினோத் தொடங்கியுள்ளார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் தயாரிக்கின்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் ஜூன், ஜூலை மாதங்களில் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் கதை களம் சதுரங்க வேட்டை பாணியில் உருவாகும் என வினோத் தெரிவித்தார். இந்த நிலையில் கமலை வைத்து வினோத் இயக்குவதாக இருந்த மிலிட்டரி பின்னனியில் உள்ள கதையை தற்போது தனுஷை வைத்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.