ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கன்னட சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் சிவராஜ் குமார். சமீபகாலமாக இவர் தமிழில் ஜெயிலர், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார். மற்ற மொழிகளில் தனது மார்கெட் விரிவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது இவரது பார்வை தெலுங்கு சினிமா பக்கம் திரும்பியுள்ளது.
இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் தனது 16வது படத்தில் நடிக்கவுள்ளார் ராம் சரண். இயக்குனர் சுகுமார் வசனத்தில் உருவாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டிய ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்போது சிவராஜ் குமார் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.