Advertisement

சிறப்புச்செய்திகள்

ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா | ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை | லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் | விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விதி விளையாடிவிட்டது : தர்ஷன் பற்றி மனம் திறந்த சிவராஜ்குமார்

02 ஜூலை, 2024 - 01:41 IST
எழுத்தின் அளவு:
Shivrajkumar-opens-up-about-Darshan
Advertisement

கன்னட திரையுலகில் கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருவது நடிகர் தர்ஷன் விவகாரம் தான். தனது காதலியான நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச செய்திகள் அனுப்பி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்தார் என்பதற்காக தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி வரச்செய்து கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார் நடிகர் தர்ஷன். அவரது காதலி பவித்ரா கவுடா உட்பட 15 பேருக்கு மேல் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கன்னட திரையுலகை சேர்ந்த கிச்சா சுதீப், உபேந்திரா, நடிகை ரம்யா உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் கொல்லப்பட்ட ரேணுகா சுவாமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்கிற ரீதியில் தர்ஷனுக்கு எதிராக கருத்து கூறியுள்ளனர். அதேசமயம் முன்னணி நடிகராக சிவராஜ்குமார் இதுபற்றி எந்த கருத்தும் இதுவரை கூறாமல் இருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் கன்னட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்ட சிவராஜ்குமார் இந்த விவகாரம் பற்றி கூறும்போது இரண்டு குடும்பத்தினருமே பரிதாபத்திற்கு உரியவர்கள் என்று பொத்தாம் பொதுவாக கூறியுள்ளார்.

மேலும், “இது போன்ற விஷயங்களில் விதி என்று ஒன்று எழுதப்பட்டுள்ளது. விதி விளையாடும்போது அதை மீறி நாம் ஒன்றும் செய்ய இயலாது. அதேசமயம் மற்றவர்களை பற்றி சொல்வதற்கு முன்பு நாம் சரியாக இருக்கிறோமா என்று ஒருவர் முதலில் நினைக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும்போது அது மற்றவர்களை காயப்படுத்தும். தற்போது இது குறித்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் நாம் அனைவரும் அமைதியாக காத்திருப்போம்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நாகேஷ் - சிவகார்த்திகேயன் பாணியில் கதாநாயகனாக அறிமுகமாகும் பிக்பாஸ் ராஜூநாகேஷ் - சிவகார்த்திகேயன் பாணியில் ... ரூ.100 கோடி வசூலை நெருங்கியதா 'மகாராஜா'? ரூ.100 கோடி வசூலை நெருங்கியதா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap