ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! |
காதல் தேசம், முதல்வன், பாய்ஸ், சிவாஜி என பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கே.வி.ஆனந்த். கனா கண்டேன் என்ற படத்தில் இயக்குனரான அவர், சூர்யா நடிப்பில் அயன், மாற்றான், காப்பான் போன்ற படங்களை இயக்கினார். இந்த மூன்றுமே சூர்யாவுக்கு ஹிட் படங்களாக அமைந்தன. காப்பானுக்கு பிறகு படங்கள் இயக்காத கே.வி.ஆனந்த், கடந்த 2021 ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.
இந்த நிலையில் கே.வி.ஆனந்தின் மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது. இதையடுத்து நடிகர் சிவகுமார் மற்றும் சூர்யா ஆகியோர் கே.வி.ஆனந்தின் வீட்டிற்கு சென்று அவரது மகளுக்கு திருமண வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.