நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

நடிகை ராஷ்மிகா மந்தனா குறுகிய காலத்தில் தென்னிந்திய அளவில் புகழ்பெற்று அதன் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்து தற்போது அங்கேயும் பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரன்பீர் கபீருடன் அவர் இணைந்து நடித்த அனிமல் என்கிற திரைப்படம் வெளியாகி ரூ.900 கோடி வசூலை தொட்டது. இதனை தொடர்ந்து ராஷ்மிகா தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி விட்டார் என்று மீடியாக்களில் ஒரு செய்தி வெளியானது. அப்படி சோசியல் மீடியாவில் அவர் நான்கு முதல் இருந்து நான்கரை கோடி சம்பளம் கேட்பதாக ஒரு செய்தி வெளியானது.
ஆச்சரியமாக இந்த செய்திக்கு பதில் அளித்துள்ள ராஷ்மிகா, “இதை பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது. இவர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல நானும் இதை தயாரிப்பாளர்களிடம் இதே அளவில் சம்பளம் கேட்கலாம் என நினைக்கிறேன். அவர்கள் என்னிடம் ஏன் என கேட்டால் மீடியாவில் இப்படி ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது சார்.. அதனால் அவர்களுடைய வார்த்தைப்படி நான் வாழ வேண்டும் என நினைக்கிறேன்.. நான் என்ன செய்யட்டும் என அவர்களுக்கு பதில் அளிக்க போகிறேன்” என்று நகைச்சுவையாக இந்த செய்தியை அணுகியுள்ளார்.