ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
நடிகை ராஷ்மிகா மந்தனா குறுகிய காலத்தில் தென்னிந்திய அளவில் புகழ்பெற்று அதன் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்து தற்போது அங்கேயும் பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரன்பீர் கபீருடன் அவர் இணைந்து நடித்த அனிமல் என்கிற திரைப்படம் வெளியாகி ரூ.900 கோடி வசூலை தொட்டது. இதனை தொடர்ந்து ராஷ்மிகா தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி விட்டார் என்று மீடியாக்களில் ஒரு செய்தி வெளியானது. அப்படி சோசியல் மீடியாவில் அவர் நான்கு முதல் இருந்து நான்கரை கோடி சம்பளம் கேட்பதாக ஒரு செய்தி வெளியானது.
ஆச்சரியமாக இந்த செய்திக்கு பதில் அளித்துள்ள ராஷ்மிகா, “இதை பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது. இவர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல நானும் இதை தயாரிப்பாளர்களிடம் இதே அளவில் சம்பளம் கேட்கலாம் என நினைக்கிறேன். அவர்கள் என்னிடம் ஏன் என கேட்டால் மீடியாவில் இப்படி ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது சார்.. அதனால் அவர்களுடைய வார்த்தைப்படி நான் வாழ வேண்டும் என நினைக்கிறேன்.. நான் என்ன செய்யட்டும் என அவர்களுக்கு பதில் அளிக்க போகிறேன்” என்று நகைச்சுவையாக இந்த செய்தியை அணுகியுள்ளார்.