கண்ணப்பாவுடன் இணைந்தார் காஜல் அகர்வால் | ஜூனியர் என்டிஆருக்காக 3 மொழிகளில் பாடிய அனிருத் | பிளாஷ்பேக் : கமலையும், மோகனையும் இணைத்த பாலுமகேந்திரா | முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு |
நடிகை ராஷ்மிகா மந்தனா குறுகிய காலத்தில் தென்னிந்திய அளவில் புகழ்பெற்று அதன் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்து தற்போது அங்கேயும் பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரன்பீர் கபீருடன் அவர் இணைந்து நடித்த அனிமல் என்கிற திரைப்படம் வெளியாகி ரூ.900 கோடி வசூலை தொட்டது. இதனை தொடர்ந்து ராஷ்மிகா தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி விட்டார் என்று மீடியாக்களில் ஒரு செய்தி வெளியானது. அப்படி சோசியல் மீடியாவில் அவர் நான்கு முதல் இருந்து நான்கரை கோடி சம்பளம் கேட்பதாக ஒரு செய்தி வெளியானது.
ஆச்சரியமாக இந்த செய்திக்கு பதில் அளித்துள்ள ராஷ்மிகா, “இதை பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது. இவர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல நானும் இதை தயாரிப்பாளர்களிடம் இதே அளவில் சம்பளம் கேட்கலாம் என நினைக்கிறேன். அவர்கள் என்னிடம் ஏன் என கேட்டால் மீடியாவில் இப்படி ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது சார்.. அதனால் அவர்களுடைய வார்த்தைப்படி நான் வாழ வேண்டும் என நினைக்கிறேன்.. நான் என்ன செய்யட்டும் என அவர்களுக்கு பதில் அளிக்க போகிறேன்” என்று நகைச்சுவையாக இந்த செய்தியை அணுகியுள்ளார்.