பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! |
120 படங்களுக்கு மேல் இயக்கிய ராம நாராயணன் இயக்கிய படம் 'ஆடிவெள்ளி'. அவரது படங்களிலேயே அதிக நாட்கள் ஓடி அதிக வசூலையும் குவித்தபடம். 1990 பிப்ரவரி 2ம் தேதி வெளியானது. இதில் சீதா, நிழல்கள் ரவி, சந்திரசேகர், அருணா, வெ.ஆ.மூர்த்தி, ஒய்.விஜயா, நடித்திருந்தனர். யானையும், பாம்பும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். என்.கே.விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்தார். சங்கர்-கணேஷ் இசை அமைத்திருந்தனர். 'வெள்ளிக்கிழமை ராமசாமி வர்றான்டா' என்ற பாடலும், வெள்ளிக்கிழமை ராமசாமி என்ற பெயர் கொண்ட யானையின் சேட்டைகளும் அன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலம்.
இந்நிலையில், 34 வருடங்களுக்குப் பிறகு 'ஆடி வெள்ளி' படம் ரீமேக் செய்யப்படுகிறது. இதுகுறித்து ராம.நாராயணனின் மகனும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான முரளி ராமசாமி கூறியதாவது:
ஆடி வெள்ளி நம் மண்ணின் நம்பிக்கைகளோடு சேர்ந்த படம் என்பதால் பெண்கள் அதனை வெற்றிப் படமாக்கினார்கள். இப்போதும், கொண்டாடப்படும், பேசப்படும் படமாக ஆடி வெள்ளி இருக்கிறது. இன்றைய காலத்துக்கும், டெக்னாலஜிக்கும், டிரெண்டுக்கும் ஏற்ப படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளோம். இப்படத்திற்கு, கிராபிக்ஸ் பணிகள் அதிகம் தேவைப்படும். அதை உள்வாங்கி இயக்கும் இயக்குநரை வைத்து எடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம்.
தற்போது, திரைக்கதையை டிரெண்டுக்கு ஏற்றவாறு மெருகூட்டும் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ் சினிமாவில் விலங்குகளை பயன்படுத்த நிறைய கட்டுப்பாடுகளையும் விதிகளையும் கடைபிடிக்க வேண்டியுள்ளது. விலங்குகளை பயன்படுத்தும்போது, மிகவும் பாதுகாப்பாக எடுக்க வேண்டியுள்ளது. இந்த சவால்களையெல்லாம் திறமையாக கையாள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. இதில் நயன்தாரா நடித்தால் சிறப்பாக இருக்கும். இதற்காக அவரை அணுக முடிவு செய்திருக்கிறோம். என்றார்.