இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் |
கமல்ஹாசனின் பேச்சும், செயலும் சில நேரங்களில் புரியாத புதிராக இருக்கும் என்பார்கள். தற்போது அவர் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றும் புரியாத புதிராக இருக்கிறது.
அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜும், ஸ்ருதிஹாசனும் எதிரெதிரே நின்று கொண்டிருக்கிறார்கள். கருப்பு, வெள்ளையில் இந்த படம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் வெளியிடப்பட்டுள்ள பதிவில் ”இனிமேல் மாயையே தீர்வாகும்... இதுவே உறவு... இதுவே சூழ்நிலை ... இதுவே மாயை” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த போஸ்டரை பார்த்து குழப்பமடைந்த ரசிகர்கள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளாரா ..? அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறாரா..? போன்ற பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். விரைவில் இதுகுறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.