தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி |
கமல்ஹாசனின் பேச்சும், செயலும் சில நேரங்களில் புரியாத புதிராக இருக்கும் என்பார்கள். தற்போது அவர் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றும் புரியாத புதிராக இருக்கிறது.
அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜும், ஸ்ருதிஹாசனும் எதிரெதிரே நின்று கொண்டிருக்கிறார்கள். கருப்பு, வெள்ளையில் இந்த படம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் வெளியிடப்பட்டுள்ள பதிவில் ”இனிமேல் மாயையே தீர்வாகும்... இதுவே உறவு... இதுவே சூழ்நிலை ... இதுவே மாயை” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த போஸ்டரை பார்த்து குழப்பமடைந்த ரசிகர்கள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளாரா ..? அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறாரா..? போன்ற பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். விரைவில் இதுகுறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.