சென்னை, முப்பாத்தம்மன் கோயிலில் வழிபட்ட ஜான்வி கபூர் | ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் சுட்டுக் கொலை | 38 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்த சத்யராஜ் | விஜய்யை நேரில் சென்று சந்தித்த அவரது பெற்றோர் | நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் இரண்டு பாடல்களை பாடியுள்ள விஜய் | ரஷ்யா பறக்கும் ‛குட் பேட் அக்லி' படக்குழு | நான் உயிருடன் இருக்கிறேன் : பார்வதி நாயர் திடீர் பதிவு | மார்பிங் புகைப்படத்தால் ரொம்பவும் கஷ்டப்பட்டேன் - கேப்ரில்லா பேட்டி | மகனை பெற்றெடுத்த ஸ்ரீவித்யா நஞ்சன் | கார்த்திக் ராஜ் தவறனாவரா? - மீரா கிருஷ்ணன் சொன்னது என்ன? |
கமல்ஹாசனின் பேச்சும், செயலும் சில நேரங்களில் புரியாத புதிராக இருக்கும் என்பார்கள். தற்போது அவர் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றும் புரியாத புதிராக இருக்கிறது.
அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜும், ஸ்ருதிஹாசனும் எதிரெதிரே நின்று கொண்டிருக்கிறார்கள். கருப்பு, வெள்ளையில் இந்த படம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் வெளியிடப்பட்டுள்ள பதிவில் ”இனிமேல் மாயையே தீர்வாகும்... இதுவே உறவு... இதுவே சூழ்நிலை ... இதுவே மாயை” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த போஸ்டரை பார்த்து குழப்பமடைந்த ரசிகர்கள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளாரா ..? அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறாரா..? போன்ற பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். விரைவில் இதுகுறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.