70 வருட காஞ்சிபுரம் பட்டு சேலையுடன் பூஜா ஹெக்டே போட்டோஸ் | அமலாக்கத் துறையிடம் அவகாசம் கேட்கும் மகேஷ் பாபு | நான் இப்போது சிங்கிள்: ஸ்ருதிஹாசன் | கேரளா தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட வசூல் விவரம், தமிழிலும் நடக்குமா ? | படம் வெளியாகும் முன்பே பாராட்டு பெறும் 'டூரிஸ்ட் பேமிலி' | ஓடிடியில் தமிழில் வரவேற்பு குறைந்த மோகன்லாலின் 'எம்புரான்' | 'ஜெயிலர்' வசூலை தாண்டுமா 'குட் பேட் அக்லி' | மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் சிம்பு! | மீண்டும் வாடிவாசல் தள்ளிப்போகிறதா? ரெட்ரோ படத்தின் புரமோஷனில் அடுத்த படத்தை அறிவித்த சூர்யா! | ஒரே நாளில் சந்தானம், சூரி படங்களுடன் மோதும் யோகி பாபு |
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தற்காலிகமாக DNS என அழைக்கின்றனர். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நாகார்ஜூனா நடிக்கின்றார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.
இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இப்படத்திற்கு 'தாராவி' என தலைப்பு வைத்ததாக தகவல் பரவி வந்தது. இப்போது கிடைத்த தகவலின் படி, இதுவரை இந்த படத்திற்கு எந்த தலைப்பும் வைக்கவில்லை என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடந்தது. அப்போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் இன்று திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார் நடிகர் தனுஷ்.