இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தனுஷ் நடிப்பில் ‛கேப்டன் மில்லர்' படம் பொங்கலுக்கு ரிலீஸானது. தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா, நாகார்ஜூனா ஆகியோரும் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு திருப்பதி, அலிபிரி பகுதியில் நடக்கிறது. அந்த பகுதியில் திடீரென போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் லேசான சலசலப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். படப்பிடிப்புக்கு அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் போக்குவரத்து மாற்றம் குறித்து போலீசார் முன்கூட்டியே அறிவிக்காததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அதேசமயம், கோயில் செல்லும் பாதையில் இப்படி படப்பிடிப்பு நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்யலாமா என பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.