தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் | பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் |

காதிர்ஸ் எண்ட்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரித்துள்ள படம் 'ஆத்மா'. ராகேஷ் சங்கர் கதை திரைக்கதை எழுத, சுகீத் இப்படத்தினை இயக்கியுள்ளார். நாயகியாக 'தில்லுக்கு துட்டு 2' புகழ் ஷ்ரத்தா ஷிவதாஸ் நடித்துள்ளார். பால சரவணன் காளி வெங்கட், கனிகா, விஜய் ஜானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் ஆடிசம் பாதித்த இளைஞராக முதன் முறையாக நரேன் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: 'கைதி' படத்திற்கு பிறகு எனக்கு போலீஸ் கேரக்டர்கள்தான் அதிகமாக வந்தது. 10 படங்களுக்கு மேல் நிராகரித்து விட்டேன். பல படங்களில் நடித்தாலும் எனது நடிப்பு திறமையை நிரூபிக்கிற ஒரு கேரக்டர் அமையவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அதை போக்கும் வகையில் அமைந்த படம்தான் ஆத்மா. எனது கேரியரில் இது முக்கியமான படம்.
இந்த கதையை கேட்டவுடன் என்னால் இப்படியான கேரக்டரில் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. இது தொடர்பாக வந்த சில ஆங்கில படங்கள், கமல் நடித்த 'சிப்பிக்குள் முத்து' படங்களை பார்த்து நடிக்கும் தைரியம் வந்தது. ஆடிசம் பாதித்தவர்களை சந்தித்து அவர்களது குரல்மொழி, உடல் மொழியை கற்றுக் கொண்டேன். பொதுவாக ஆடிசம் பாதித்தவர்கள் குழந்தைகளாக, சிறுவர்களாக இருப்பார்கள். ஆடிசம் பாதித்த இளைஞர்களை பார்ப்பது அரிது. அதனால் அந்த பயிற்சி பெற மிகவும் சிரமப்பட்டேன். 2 வருடங்கள் இதற்காக நேரம் ஒதுக்கி, 12 கிலோ வரை எடை கூட்டி நடித்திருக்கிறேன். இந்த கேரக்டர் எனக்கு விருதுகளை பெற்றுத் தரும் என்கிறார்கள். அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை. எனது திறமைக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தால் போதும். என்கிறார் நரேன்.




