தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் 'அயலான்'. இப்படம் தமிழில் வெளியான அன்றே தெலுங்கிலும் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு தெலுங்குப் படங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எதிர்ப்பு எழுந்தது. அதன் காரணமாக வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு இன்று வெளியாவதாக இருந்தது.
இந்நிலையில் இன்று வெளியாக வேண்டிய படம் சட்டச்சிக்கல் காரணமாக வெளியாகவில்லை. இன்றைய காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த சிக்கலை தீர்த்த பிறகுதான் படம் வெளியாகும் என்கிறார்கள். இன்று வங்கிகளும், நீதிமன்றங்களும் விடுமுறை என்பதால் சிக்கல் தீர வாய்ப்பில்லை. அடுத்த காட்சிகளுக்காவது படம் வெளியாகுமா என்பது பற்றி சம்பந்தப்பட்டவர்கள் எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.




