எல்லா படங்களுக்கும் கதாநாயகி அவசியம் இல்லை : நிகிலா விமல் | ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்ட பிரபாஸ் | மீண்டும் ஷாரூக்கான் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | ஆளே இல்லாத நடிகர் சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு : அமைச்சரின் பரிந்துரையில் கட்டணமின்றி சலுகை | இளையராஜாவை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் | ஆவேசம் பஹத் பாசில் பாணியில் ரிலீஸ் தேதியை அறிவித்த விஸ்வக் சென் | சூர்யா படத்தில் கதாநாயகியாக இணையும் பூஜா ஹெக்டே | புஷ்பா 2 வில் இருந்து விலகிய எடிட்டர் ஆண்டனி ரூபன் ? | ஜீத்து ஜோசப் டைரக்ஷனில் பஹத் பாசில் படம் அறிவிப்பு | கரகாட்டக்காரன் 2 வருமா - ராமராஜன் பதில் |
சமீபகாலமாக தமிழ், தெலுங்கு என எந்த மொழியாக இருந்தாலும் அங்குள்ள முன்னணி ஹீரோக்களின் போஸ்டர்களில் எல்லாமே அவர்கள் புகை பிடிப்பது போன்ற காட்சி தான் தவறாமல் இடம் பெறுகிறது. இதுகுறித்த கடுமையான விமர்சனங்களையும் அவர்கள் சந்தித்து வருகிறார்கள். மேலும் படத்திலும் அவர்கள் சிகரெட் குடிக்கும் காட்சிகள் இடம் பெறுகின்றன.
சமீபத்தில் தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தின் போஸ்டர்களில் எல்லாம் பெரும்பாலும் அவர் புகை பிடிப்பது போன்று தான் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நிஜமாகவே தனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லை என்றும் புகை பிடிப்பதை எப்போதும் ஊக்கப்படுத்த மாட்டேன் என்றும் கூறியுள்ளார் மகேஷ்பாபு.
இதுகுறித்து மகேஷ்பாபு கூறும்போது, “இந்த படத்தில் முதல் நாள் நிஜமான பீடி பிடித்தபோது அதனால் ஏற்பட்ட தலைவலியை என்னால் தாங்க முடியவில்லை. அதற்கு பிறகு இதுபற்றி இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸிடம் கூறியபோது, இந்த ஆயுர்வேத பீடியை உபயோகிக்க முடிவு செய்தோம். இதை புகைத்தபோது மனதிற்கு மட்டுமல்ல மூளைக்குமே நல்ல சுறுசுறுப்பு ஏற்பட்டது. அதன் புகையால் ஏற்பட்ட நறுமணம் கூட இனிமையாக இருந்தது” என்று கூறியுள்ளார்.