300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் திரையுலகம் சார்பில் ‛கலைஞர் 100' என்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சி சென்னையில் உள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாலை 6 மணியளவில் துவங்கியது. இதில் திரளான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் அமைச்சர்கள் உதயநிதி, சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் திரையுலகை சேர்ந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தனுஷ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அமீர், வெற்றிமாறன், ரோஜா, சிவராஜ்குமார், கருணாஸ், லைகா சுபாஸ்கரன், பார்த்திபன், வடிவேலு, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி, பி வாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி துவங்கியது. வேல் முருகன், சின்ன பொண்ணு, எஸ்ஏ ராஜ்குமார் உள்ளிட்டோர் பாடல்கள் பாடினர். நடிகை லட்சுமி மேனன், தமிழ் பற்றிய பாடலுக்கு நடனம் ஆடினார். டிரம்ஸ் சிவமணி மற்றும் லிடியனின் இசை நிகழ்ச்சி நடந்தது.