தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் திரையுலகம் சார்பில் ‛கலைஞர் 100' என்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சி சென்னையில் உள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாலை 6 மணியளவில் துவங்கியது. இதில் திரளான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் அமைச்சர்கள் உதயநிதி, சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் திரையுலகை சேர்ந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தனுஷ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அமீர், வெற்றிமாறன், ரோஜா, சிவராஜ்குமார், கருணாஸ், லைகா சுபாஸ்கரன், பார்த்திபன், வடிவேலு, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி, பி வாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி துவங்கியது. வேல் முருகன், சின்ன பொண்ணு, எஸ்ஏ ராஜ்குமார் உள்ளிட்டோர் பாடல்கள் பாடினர். நடிகை லட்சுமி மேனன், தமிழ் பற்றிய பாடலுக்கு நடனம் ஆடினார். டிரம்ஸ் சிவமணி மற்றும் லிடியனின் இசை நிகழ்ச்சி நடந்தது.




