மீண்டும் 'வித் லவ்' கூட்டணி : அபிஷன் ஜீவிந்த் தகவல் | 'ஜெய் ஹனுமான்' விரைவில் ஆரம்பம் | சோனி விழா : வருகிறது புதிய சேனல் | கடும் எதிர்ப்பால் மனோஜ் பாஜ்பாய் படத் தலைப்பு மாற்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு | பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு | பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி |

மாவீரன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21வது படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் அயலான் படத்தின் புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அளித்த ஒரு பேட்டியில், இயக்குனர் அட்லி குறித்த ஒரு கேள்விக்கு சிவகார்த்திகேயன் பதில் அளித்துள்ளார்.
அதில், ‛‛இயக்குனர் அட்லியை ஏற்கனவே வெளியான படங்களை காப்பியடித்து படம் இயக்குவதாக பலரும் விமர்சிக்கிறார்கள். ஆனால் அவரை மற்ற மொழிகளில் கொண்டாடுகிறார்கள். ஒரு தமிழ் இயக்குனர் பாலிவுட் சென்று ஷாரூக்கானை வைத்து படம் எடுத்து 1200 கோடி வியாபாரம் செய்வது விளையாட்டு அல்ல. அவர் இயக்கும் கதைகள் ஏற்கனவே வந்துள்ளது என்ற விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும், பாலிவுட்டில் தொடாத ஒன்றை இங்கிருந்து ஒருத்தர் போய் பண்ணிருக்கிறார் என்கிற போது அதை நாமெல்லாம் கொண்டாட வேண்டும்.
அட்லி இயக்கும் படங்கள் பொழுதுபோக்காக இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். இன்னொரு பக்கம் சிலர் அவரை விமர்சிக்கிறார்கள். இப்போது அட்லி இங்கிருந்து பாலிவுட் போய்விட்டார். இதன் காரணமாக நமக்கான கமர்சியல் இயக்குனர் இல்லை. விஜய்யும், அட்லியும் இணைந்த படங்களின் வியாபாரமே வேற லெவலில் இருந்தது. தற்போது அது மிஸ் ஆகிறது என்று சிவகார்த்திகேயன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.