விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபோது சிறிது நேரம் அவரது உடலை பார்த்து கனத்த இதயத்துடன் கலங்கி போய் நின்று அஞ்சலி செலுத்தினார் விஜய். 
விஜய்யை ஏற்றிவிட்ட ஏணிப்படி விஜயகாந்த்
நடிகர் விஜய்யின் முதல் படமான “நாளைய தீர்ப்பு” தோல்வியடைய, விஜயகாந்தோடு விஜய் இணைந்து ஒரு படத்தில் நடித்தால் அது அவரது திரை வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும் என்று எண்ணிய விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்காக, தானே மனமுவந்து விஜயகாந்த் நடித்துக் கொடுத்த திரைப்படம்தான் “செந்தூரப்பாண்டி”. மிகப் பெரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்திற்குப் பின் விஜய்யின் திரைப்பயணமும் பிரகாசமானது. விஜய்யின் சினிமா வளர்ச்சியில் விஜயகாந்த்தின் பங்கு அளப்பரியது. அவரின் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் விஜய் நடித்துள்ளார். விஜய் ஹீரோவான பின் அவருக்கு வெற்றி படத்தையும் கொடுத்தது விஜயகாந்த் என்றால் மிகையல்ல.