'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
அப்பா கஸ்தூரிராஜா, அண்ணன் செல்வராகவன் வழியில் நடிகர் தனுஷ், 'பவர் பாண்டி' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அவர் இயக்கிய முதல் படமே வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து பல ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்த அவர் தற்போது தனது 50வது படத்தை இயக்கி முடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் தனுஷ் தனது 3வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். படத்திற்கு 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 'வழக்கமான காதல் கதை' என்ற டேக் லைன் கொடுக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார், லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவும், தாய் விஜயலட்சுமியும் இணைந்து வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார்கள். பவிஷ், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், ராபியா, ரம்யா, வெங்கி ஆகியோர் நடிக்கிறார்கள். ரொமான்ட்டிக் காதல் கதை என்கிற ஜார்னரில் படம் உருவாகிறது.