டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

அப்பா கஸ்தூரிராஜா, அண்ணன் செல்வராகவன் வழியில் நடிகர் தனுஷ், 'பவர் பாண்டி' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அவர் இயக்கிய முதல் படமே வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து பல ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்த அவர் தற்போது தனது 50வது படத்தை இயக்கி முடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் தனுஷ் தனது 3வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். படத்திற்கு 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 'வழக்கமான காதல் கதை' என்ற டேக் லைன் கொடுக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார், லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவும், தாய் விஜயலட்சுமியும் இணைந்து வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார்கள். பவிஷ், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், ராபியா, ரம்யா, வெங்கி ஆகியோர் நடிக்கிறார்கள். ரொமான்ட்டிக் காதல் கதை என்கிற ஜார்னரில் படம் உருவாகிறது.