வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு | பிளாஷ்பேக்: ஹீரோக்கள் ஆதிக்கத்தை வென்ற மாதுரி தேவி | பிளாஷ்பேக்: சினிமாவில் சிவகுமாரின் 60வது ஆண்டு: தீராத அந்த இரண்டு ஏக்கங்கள் | ராணாவை நள்ளிரவில் எழுப்பிய கட்டப்பா ; 'ராணா நாயுடு' வெப் சீரிஸுக்கு வித்தியாசமான புரமோஷன் | மோகன்லால் மம்முட்டி பட டைட்டிலை தவறிப்போய் வெளியிட்ட இலங்கை சுற்றுலாத்துறை | 'குபேரா' தமிழ், தெலுங்கில் தான் படமாக்கினோம் : இயக்குனர் சேகர் கம்முலா தகவல் | மணிரத்னம் பட வாய்ப்பு கைநழுவி போனது இப்படித்தான்: மலையாள நடிகர் விரக்தி | தக் லைப் : கர்நாடகாவில் அடுத்த வாரம் ரிலீஸ் | விமர்சனத்திற்கு பணம் கேட்பதா ? கேரளாவிலும் இயக்குனர் கிளப்பிய சர்ச்சை.. போலீஸிலும் புகார் | மம்முட்டியை தொடர்ந்து தனது வீட்டையும் சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்ட மோகன்லால் |
அப்பா கஸ்தூரிராஜா, அண்ணன் செல்வராகவன் வழியில் நடிகர் தனுஷ், 'பவர் பாண்டி' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அவர் இயக்கிய முதல் படமே வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து பல ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்த அவர் தற்போது தனது 50வது படத்தை இயக்கி முடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் தனுஷ் தனது 3வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். படத்திற்கு 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 'வழக்கமான காதல் கதை' என்ற டேக் லைன் கொடுக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார், லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவும், தாய் விஜயலட்சுமியும் இணைந்து வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார்கள். பவிஷ், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், ராபியா, ரம்யா, வெங்கி ஆகியோர் நடிக்கிறார்கள். ரொமான்ட்டிக் காதல் கதை என்கிற ஜார்னரில் படம் உருவாகிறது.