'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் | 2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' படம் மீது கலவையான விமர்சனங்களே வெளிவந்தன. குறிப்பாக இடைவேளைக்குப் பின் படம் சிறப்பாக இல்லை என்பதே பலரது கருத்தாக இருந்தது. அதைத் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளார் லோகேஷ்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அதற்கான காரணம் வெளியீட்டுத் தேதி குறித்த அழுத்தம்தான் என்றும் சொல்லியிருக்கிறார். “இனிமேல் நான் முடிவு பண்ணி வச்சிருக்கிறது, இந்த ரிலீஸ் டேட் போடாம படம் பண்ணணும்கறது. நானே எனக்கு வச்சிக்கிட்ட ஒரு கொள்கை. கொஞ்சம் டைம் தேவைன்னு நினைக்கிறேன். லியோல செகண்ட் ஹாப்ல இருக்கிற பிரச்சினைகள்னு சிலர் சொல்லிக்கிட்டிருந்தாங்க. அதை, நான் ஏத்துக்கறேன். அது மாதிரி எதுவும் ஆகிடக் கூடாதுங்கறதால இன்னும் கவனமா இருப்பேன்.
ரிலீஸ் டேட் பிரஷர் இல்லாம பண்ணணும். நாம முடியாதுன்னு சொன்னால் யாரும்கேட்கப் போறதில்ல. நாம ஒரு தைரியத்துல போயிடறோம். ஒரு பெரிய படத்தை எடுக்கும் போது பத்து மாசத்துக்குள்ள எல்லாத்தையும் முடிக்கணும்கறது வந்து, அந்த மாசம் என்ன ஆச்சுனே தெரியாது. திரும்பிப் பார்த்தால் என்ன ஆச்சுனு தெரியாது. திரும்பிப் பார்த்தால் கடந்த நாலு வருஷம் அப்படிதான் ஆகியிருக்கு. என்ன பண்றோம்னே தெரியாம போகுது. அவ்வளவு வேகம் தேவையில்லன்னு நினைக்கிறேன்,” எனப் பேசியுள்ளார்.