சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

'லவ்டுடே' படத்திற்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, அப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. அதற்காக தனி அலுவலகம் போடப்பட்டு தயாரிப்புப் பணிகளும் ஆரம்பமானது. கடந்த மாதம் நடைபெற்ற கமல்ஹாசனின் பிறந்தநாள் பார்ட்டியில் கூட விக்னேஷ் சிவன் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் அப்படத்தின் தயாரிப்பிலிருந்து கமல்ஹாசன் விலகிவிட்டார். அப்படத்தை 'லியோ' படத் தயாரிப்பாளரான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிக்கிறார். இதற்கான பூஜையும் நடைபெற்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்கள்.
கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுடன் விக்னேஷ் சிவனுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடே தயாரிப்பாளர் மாறக் காரணம் என்கிறார்கள். மேலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்திற்காக நயன்தாராவிடம் பேசி அவர் நடிக்க மறுத்ததாகவும் ஒரு தகவல் உலவி வருகிறது.
விக்னேஷ் சிவன், அனிருத், பிரதீப், எஸ்ஜே சூர்யா, கிரித்தி ஷெட்டி என புதிய கூட்டணியில் உருவாக உள்ள இப்படம் மீது இப்போதே எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.