புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜெயப்பிரதா. தமிழில் குறைவான படங்களில் நடித்தாலும் 'சலங்கை ஒலி' படம் மூலம் மக்கள் மனதில் பதிந்தவர். சென்னை அண்ணா சாலையில் திரையரங்கம் ஒன்றை ஜெயப்பிரதா நடத்தி வந்தார். அங்கு பணிபுரியும் தொழிலாளா்களின் ஊதியத்தில் இஎஸ்ஐ தொகை பிடிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் அந்த தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் ஜெயப்பிரதா செ லுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவா் மீது எழும்பூா் நீதிமன்றத்தில் தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகம் வழக்கு தொடா்ந்தது.
இந்த வழக்கை எதிர்த்து ஜெயப்பிரதா சென்னை உயா்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, பிரதான வழக்கை விசாரித்த எழும்பூா் நீதிமன்றம் ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து விட்டது.
இதை எதிர்த்து ஜெயப்பிரதா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இரண்டு நீதிபதிகள் அடங்கிய பென்ஞ் விசாரணை நடத்தியது. பின்னர், சிறை தண்டனைக்காக ஜெயப்பிரதா சரணடைய வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளித்தும், தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டது. அதோடு இஎஸ்ஐக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.