இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

1970 மற்றும் 80களில் முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் ஜெயப்பிரதா. தமிழில் குறைவான படங்களில் நடித்தாலும் தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பு தவிர அரசியல், தொழில் துறையிலும் ஈடுபட்டு வந்தார்.
சென்னை, அண்ணா சாலையில் திரையரங்கம் நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட இ.எஸ்.ஐ. தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என்ற புகார் எழுந்தது. இதுதொடர்பாக, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு பல வருடங்களாக நடந்து வந்தது. இதை எதிர்த்து ஜெயப்பிரதா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று தீர்பளித்த நீதிமன்றம், ஜெயப்பிரதா மற்றும் அவரது பங்குதாரர்கள் இருவர் ஆகியோருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தொழிலாளர்களிடம் வசூலித்த தொகையை தந்து விடுவதாக ஜெயப்பிரதா தரப்பு கூறியதை நீதிமன்றம் ஏற்கவில்லை. தீர்ப்பை எதிர்த்து ஜெயப்பிரதா மேல்முறையீடு செய்வார் என்று தெரிகிறது.




