திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
சமீபத்தில் தெலுங்கு திரையுலகில் ஜூனியர் நடிகை ஒருவர் புஷ்பா படத்தில் நடித்து புகழ்பெற்ற ஜெகதீஷ் பிரதாப் பந்தாரி என்பவரால் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி அதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து நடிகர் ஜெகதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கு திரையுலக பிரபலங்களிடம் இருந்து பெரிய அளவில் இந்த சம்பவத்திற்கு ரியாக்சன் எதுவும் வெளிப்படவில்லை. அதே சமயம் இதுபோன்று பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது முதல் நபராக குரல் கொடுப்பவர் பின்னணி பாடகி சின்மயி. இறந்து போன ஜூனியர் நடிகை மரணம் குறித்து சின்மயி தனது சோஷியல் மீடியா பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறும்போது, “நாட்டின் முதல் திரைப்பட அமைப்புகளில் பாலியல் துன்புறுத்தல் நிவர்த்திக் குழுவைக் கொண்ட அமைப்பு தெலுங்கு பிலிம் சேம்பர். இறந்துபோன அந்த பெண்ணுக்கு அவளுக்கான உரிமைகள் பற்றி தெரிந்திருந்தால், அவளுக்கு சட்டரீதியான உதவி கிடைத்து இருந்தால், அவள் பயப்பட வேண்டி இருந்திருக்காது. தான் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று உணர்ந்திருப்பாள். ஒரு பெண்ணை பிளாக்மெயில் செய்வது எளிது என ஒருவன் நினைத்ததால் இன்று ஒரு பெண் இறந்திருக்கிறாள். ஏனென்றால் நமது சமூகம் பெண்களின் கவுரவம் அவளது உடலில் தான் இருக்கிறது என்று சொல்லி வைத்திருக்கிறது. இன்னும் இந்த வழக்கு பல வருடங்கள் நடக்கும். அந்த மனிதன் நாளை ஜாமீன் கிடைத்து வெளியே வரத்தான் போகிறான். உங்களுக்குத்தான் தெரியுமே இந்திய சட்ட அமைப்பை பற்றி” என்று தன்னுடைய கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.