ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
சமீபத்தில் தெலுங்கு திரையுலகில் ஜூனியர் நடிகை ஒருவர் புஷ்பா படத்தில் நடித்து புகழ்பெற்ற ஜெகதீஷ் பிரதாப் பந்தாரி என்பவரால் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி அதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து நடிகர் ஜெகதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கு திரையுலக பிரபலங்களிடம் இருந்து பெரிய அளவில் இந்த சம்பவத்திற்கு ரியாக்சன் எதுவும் வெளிப்படவில்லை. அதே சமயம் இதுபோன்று பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது முதல் நபராக குரல் கொடுப்பவர் பின்னணி பாடகி சின்மயி. இறந்து போன ஜூனியர் நடிகை மரணம் குறித்து சின்மயி தனது சோஷியல் மீடியா பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறும்போது, “நாட்டின் முதல் திரைப்பட அமைப்புகளில் பாலியல் துன்புறுத்தல் நிவர்த்திக் குழுவைக் கொண்ட அமைப்பு தெலுங்கு பிலிம் சேம்பர். இறந்துபோன அந்த பெண்ணுக்கு அவளுக்கான உரிமைகள் பற்றி தெரிந்திருந்தால், அவளுக்கு சட்டரீதியான உதவி கிடைத்து இருந்தால், அவள் பயப்பட வேண்டி இருந்திருக்காது. தான் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று உணர்ந்திருப்பாள். ஒரு பெண்ணை பிளாக்மெயில் செய்வது எளிது என ஒருவன் நினைத்ததால் இன்று ஒரு பெண் இறந்திருக்கிறாள். ஏனென்றால் நமது சமூகம் பெண்களின் கவுரவம் அவளது உடலில் தான் இருக்கிறது என்று சொல்லி வைத்திருக்கிறது. இன்னும் இந்த வழக்கு பல வருடங்கள் நடக்கும். அந்த மனிதன் நாளை ஜாமீன் கிடைத்து வெளியே வரத்தான் போகிறான். உங்களுக்குத்தான் தெரியுமே இந்திய சட்ட அமைப்பை பற்றி” என்று தன்னுடைய கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.