யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் | வேள்பாரிக்கு தீவிரம் காட்டும் ஷங்கர் : ஹீரோ யார்? | வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் | இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸ் : 2025 தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்குமா? | பிளாஷ்பேக்: முதல்வர் ஸ்டாலினுடன் நடித்த பாக்யஸ்ரீ | பிளாஷ்பேக்: திடீர் இயக்குனராகி, காணாமல் போன வில்லன் |

துணிவு படத்தை அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் 233வது படத்தை வினோத் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது கமல்ஹாசன், பிரபாஸ் உடன் நடிக்கும் கல்கி 2898 ஏடி, மணிரத்னம் இயக்கி வரும் தக் லைப் ஆகிய படங்களில் நடிக்க போவதாக கூறப்படுகிறது. இதனால் வினோத் இயக்கும் படத்தில் இப்போதைக்கு அவர் நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஏற்கனவே தான் கதை கூறியுள்ள தனுஷ், யோகி பாபு ஆகியோரிடத்தில் மீண்டும் அவர் கால்சீட் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பிஸியாக இருப்பதாக சொல்லி விட்டனர். இதனால் ஏற்கனவே தான் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்த கார்த்தியிடம் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு கால் சீட் கேட்டு வருவதாகவும், இன்னொரு பக்கம் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தனது மூன்று படங்களில் நடித்த அஜித் குமாரை மீண்டும் இயக்க கால்சீட் கேட்டு வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன