என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் | கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் பட வில்லன் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம் | ஓடிப்போனவளா? ஷகிலாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | பைனான்சியல் திரில்லர் படத்தில் பிரியா பவானி சங்கர் |
சென்னை மழை வெள்ளம் முடிவுக்கு வந்தாலும் 'பருத்திவீரன்' பட விவகாரம் முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டே போகிறது. அமீர் அளித்த சில பேட்டிகள், தயாரிப்பாளர் ஞானவேல் அளித்த பேட்டி, தயாரிப்பாளர் சங்க முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியன் அளித்த போட்டி, அமீர் தந்த அறிக்கை என தற்போது வரையிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அமீர் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்து வரும் நிலையில் சூர்யா குடும்பத்தினர் கடும் வெறுப்பில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்கள் தரப்பிலிருந்து இனி அமீர் பற்றி எதுவுமே பேசாமல், அவருடன் எந்தவிதமான தொடர்பும் வைக்காமல் இருப்பதே நல்லது என முடிவெடுத்துள்ளதாகத் திரையுலகில் தெரிவிக்கிறார்கள்.
அதனால், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக உள்ள 'வாடிவாசல்' படத்தில் சூர்யா தொடர்ந்து நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அப்படத்தின் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பதை இயக்குனர் வெற்றிமாறன் தரப்பு சமீபத்தில் கூட உறுதி செய்தது. ஆனால், அமீர் நடிப்பதாக இருந்தால் அதில் சூர்யா நடிக்க விரும்ப மாட்டார் என்றே தெரிகிறது.
அதே சமயம் வெற்றிமாறன், சூர்யா கூட்டணி என்பதால் அந்தப் படத்திற்கான சில வியாபாரம் ஏற்கெனவே முடிந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். அதனால், சூர்யா நடிக்காமல் போனால் படத்தின் தயாரிப்பாளர் தாணு சிக்கலை சந்திக்க நேரும். அமீருக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும் வெற்றிமாறன் அமீர் பக்கமே இருப்பார் என்கிறார்கள்.
வெற்றிமாறன் அமீரை படத்திலிருந்து நீக்க வேண்டும் அல்லது, அமீரே தானாக படத்திலிருந்து விலக வேண்டும். இதில் ஏதாவது ஒன்று நடந்தால்தான் 'வாடிவாசல்' படத்தில் சூர்யா நடிக்கலாம் என்ற நிலைதான் தற்போது உள்ளது என்று கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
வாடிவாசலுக்கு என்ன வழி கிடைக்கும் என்பது உடனடியாகத் தெரிய வாய்ப்பில்லை. சூர்யாவின் 'கங்குவா' படம் முடியும் போதுதான் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியும்.