'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
சென்னை மழை வெள்ளம் முடிவுக்கு வந்தாலும் 'பருத்திவீரன்' பட விவகாரம் முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டே போகிறது. அமீர் அளித்த சில பேட்டிகள், தயாரிப்பாளர் ஞானவேல் அளித்த பேட்டி, தயாரிப்பாளர் சங்க முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியன் அளித்த போட்டி, அமீர் தந்த அறிக்கை என தற்போது வரையிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அமீர் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்து வரும் நிலையில் சூர்யா குடும்பத்தினர் கடும் வெறுப்பில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்கள் தரப்பிலிருந்து இனி அமீர் பற்றி எதுவுமே பேசாமல், அவருடன் எந்தவிதமான தொடர்பும் வைக்காமல் இருப்பதே நல்லது என முடிவெடுத்துள்ளதாகத் திரையுலகில் தெரிவிக்கிறார்கள்.
அதனால், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக உள்ள 'வாடிவாசல்' படத்தில் சூர்யா தொடர்ந்து நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அப்படத்தின் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பதை இயக்குனர் வெற்றிமாறன் தரப்பு சமீபத்தில் கூட உறுதி செய்தது. ஆனால், அமீர் நடிப்பதாக இருந்தால் அதில் சூர்யா நடிக்க விரும்ப மாட்டார் என்றே தெரிகிறது.
அதே சமயம் வெற்றிமாறன், சூர்யா கூட்டணி என்பதால் அந்தப் படத்திற்கான சில வியாபாரம் ஏற்கெனவே முடிந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். அதனால், சூர்யா நடிக்காமல் போனால் படத்தின் தயாரிப்பாளர் தாணு சிக்கலை சந்திக்க நேரும். அமீருக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும் வெற்றிமாறன் அமீர் பக்கமே இருப்பார் என்கிறார்கள்.
வெற்றிமாறன் அமீரை படத்திலிருந்து நீக்க வேண்டும் அல்லது, அமீரே தானாக படத்திலிருந்து விலக வேண்டும். இதில் ஏதாவது ஒன்று நடந்தால்தான் 'வாடிவாசல்' படத்தில் சூர்யா நடிக்கலாம் என்ற நிலைதான் தற்போது உள்ளது என்று கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
வாடிவாசலுக்கு என்ன வழி கிடைக்கும் என்பது உடனடியாகத் தெரிய வாய்ப்பில்லை. சூர்யாவின் 'கங்குவா' படம் முடியும் போதுதான் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியும்.