அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகை, அதிக சம்பளம் வாங்கும் நடிகை என திரையுலகிலும் வெளியிலும் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இத்தனை வருடங்களாக கதாநாயகியாக மட்டுமே நடித்து நீடித்து வருவதெல்லாம் சாதாரண விஷயமல்ல. ஆனால், தனி கதாநாயகியாக நயன்தாராவால் குறிப்பிடத்தக்க வெற்றிகளைத் தர முடியவில்லை என்பதும் உண்மை.
“நீ எங்கே என் அன்பே, மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா, ஐரா, கொலையுதிர் காலம், நெற்றிக்கண், ஓ 2, கனெக்ட், அன்னபூரணி” ஆகிய படங்களில் தனி கதாநாயகியாக நடித்திருக்கிறார் நயன்தாரா. இதில் 'கோலமாவு கோகிலா' படத்திற்குப் பிறகு அவர் நடித்து தியேட்டர்களிலும், ஓடிடி தளங்களிலும் வெளியான படங்கள் வரவேற்பைப் பெறவில்லை.
சரியான கதைகளைத் தேர்வு செய்யாத காரணத்தால் அவரால் தனித்து வெற்றி பெற முடியவில்லை. 'பிகில்' படத்திற்குப் பிறகு ரஜினியுடன் சேர்ந்து நடித்த 'தர்பார், அண்ணாத்த' மற்றும் இந்த வருடம் வெளிவந்த 'இறைவன்' ஆகிய படங்கள் கூட தோல்விப் படங்களாகவே அமைந்தது. இடையில் 'மூக்குத்தி அம்மன்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் சுமாராக ஓடியது. அதே சமயம் அவர் ஹிந்தியில் அறிமுகமான 'ஜவான்' படம் ஆயிரம் கோடி வசூல் படமாக அமைந்தது.
கதையிலும், கதாபாத்திரங்களிலும் இன்னும் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே இந்த தொடர் தோல்விகளிலிருந்து அவர் தப்பிக்க முடியும்.