இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் தண்ணீரில் தத்துளித்துக் கொண்டு வருகிறார்கள். இன்னும் கூட பல பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ‛‛மக்களுக்கு என்ன செய்வது என்பது தான் தற்போதைய பணி. அரசை குறை கூறுவது அல்ல. அரசு இயந்திரம் என்பது ஒரு கோடி பேருக்கு சென்று சேர்வது சாத்தியமில்லை. எதிர்காலத்தில் மழை பாதிப்பு இல்லாதபடி வல்லுநர்களுடன் இணைந்து திட்டங்கள் ஆய்வு செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இதையடுத்து கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‛‛தட் படுத்தே விட்டானய்யா மொமண்ட். மக்களுக்கு தம் அவதியை வெளியிட உரிமை இல்லையா. யாரும் வேண்டுமென்றே குறை சொல்ல விரும்பவில்லை. நன்றி சொல்லவே விரும்புவார்கள். அரசின் விளம்பர பிரச்சாரம் அளவிற்கு செயல்பாடு இருந்தால் நன்றி சொல்லவும் சென்னை தயங்காது'' என்று குறிப்பிட்டுள்ளார்.