ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

கொரோனோ காலகட்டத்தில் ஓடிடி நிறுவனங்கள் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றன. முன்னணி நடிகர்கள் படங்களின் ஓடிடி உரிமைகளைப் பெற அந்நிறுவனங்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவும். ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.
வட இந்தியாவில் உள்ள மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் அதற்குக் குறைவான வாரங்களில் ஓடிடியில் வெளியாகும் படங்களை அவர்களது தியேட்டர்களில் திரையிட அனுமதிப்பதில்லை. சமீபத்தில் தமிழில் வெளிவந்த 'லியோ' படம் அதனால்தான் வட இந்தியாவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வெளியாகவில்லை.
இந்த வாரம் வெளியாக உள்ள ஹிந்திப் படமான 'அனிமல்' படமும் ஓடிடி தளத்தில் 8 வாரங்களுக்குப் பிறகே வெளியாக உள்ளது. ஹிந்திப் படங்கள் 8 வார இடைவெளியைப் பின்பற்றுவதைப் போல தமிழ்படங்களும் பின்பற்றுவார்களா என இங்குள்ள தியேட்டர்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள். நான்கு வாரங்களுக்குள் வெளியாவதால்தான் தமிழ்ப் படங்களைப் பார்க்க தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
நான்கு வாரத்தில் ஓடிடியிலேயே பார்த்துக் கொள்ளலாம் என பெரும்பாலான குடும்பத்தினர் நினைப்பதால்தான் தற்போது வார நாட்களில் பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்தாகும் நிலை உள்ளது என்றும் அவர்கள் கொந்தளிக்கிறார்கள். தியேட்டர்காரர்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே 4 வாரங்கள் என்பது 8 வாரங்களாக மாறும்.




