ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா |
கொரோனோ காலகட்டத்தில் ஓடிடி நிறுவனங்கள் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றன. முன்னணி நடிகர்கள் படங்களின் ஓடிடி உரிமைகளைப் பெற அந்நிறுவனங்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவும். ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.
வட இந்தியாவில் உள்ள மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் அதற்குக் குறைவான வாரங்களில் ஓடிடியில் வெளியாகும் படங்களை அவர்களது தியேட்டர்களில் திரையிட அனுமதிப்பதில்லை. சமீபத்தில் தமிழில் வெளிவந்த 'லியோ' படம் அதனால்தான் வட இந்தியாவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வெளியாகவில்லை.
இந்த வாரம் வெளியாக உள்ள ஹிந்திப் படமான 'அனிமல்' படமும் ஓடிடி தளத்தில் 8 வாரங்களுக்குப் பிறகே வெளியாக உள்ளது. ஹிந்திப் படங்கள் 8 வார இடைவெளியைப் பின்பற்றுவதைப் போல தமிழ்படங்களும் பின்பற்றுவார்களா என இங்குள்ள தியேட்டர்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள். நான்கு வாரங்களுக்குள் வெளியாவதால்தான் தமிழ்ப் படங்களைப் பார்க்க தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
நான்கு வாரத்தில் ஓடிடியிலேயே பார்த்துக் கொள்ளலாம் என பெரும்பாலான குடும்பத்தினர் நினைப்பதால்தான் தற்போது வார நாட்களில் பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்தாகும் நிலை உள்ளது என்றும் அவர்கள் கொந்தளிக்கிறார்கள். தியேட்டர்காரர்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே 4 வாரங்கள் என்பது 8 வாரங்களாக மாறும்.