தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
பிக்பாஸ் வீட்டிலிருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார் பிரதீப் ஆண்டனி. ஆனாலும், வெளியே அவருக்கு பரவலாக ஆதரவு கிடைத்து வருகிறது. சில தினங்களுக்கு முன் பிரதீப்பின் ஆதரவாளர்கள் வனிதா விஜயகுமாரை தாக்கியதில் அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து வனிதாவும் பிரதீப்பும் பேசிக்கொண்டு சமாதானம் ஆகிவிட்ட வாட்சப் உரையாடலும் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் வனிதாவுக்கு தன்னால் அனுதாபம் காட்ட முடியவில்லை என்று கஸ்தூரி கூறியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், 'அடித்தவர் யாரோ அதற்கு பிரதீப் எப்படி பொறுப்பாக முடியும். தன் ரிவியூவால் வந்த வினை. வனிதாவின் ருசிகரமான பொய்கள் யு-டியூப்புக்கும் விஜய் டிவிக்கும் வேண்டுமானல் கண்டண்டாக பயன்படும். போலீஸிடம் வியாபாரமாகுமா?. நான் இதற்கு அனுதாபம் காட்ட வேண்டும். ஆனால், சனியன் இந்த நேரம் பார்த்து மதுமிதா கையை வெட்டிக்கொண்டு நின்ற போது வனிதாவும் அவரை சார்ந்தவர்களும் மதுமிதாவை சுற்றிவளைத்தது ஞாபகம் வருகிறது. இது வெறும் விளையாட்டு என்பது அப்போது ஞாபகத்து வரவில்லையா? உங்களுக்கென்று இல்லை யாருக்குமே வன்முறை நடக்கக்கூடாது ' என்று பதிவிட்டுள்ளார்.