'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? |
கடந்த 2014 ல் ஹிந்தியில் வெளியாகி அதிரடி வெற்றி பெற்ற படம் 'மர்தாணி'. பெண்களை மையப்படுத்தி அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி இருந்த இந்த படத்தில் கதாநாயகியாக ராணி முகர்ஜி நடித்திருந்தார். பிரதீப் சர்கார் இயக்க, இதன் கதையை கோபி புத்ரன் என்பவர் எழுதியிருந்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் மர்தாணி-2 என்கிற பெயரில் 2019ம் வருடம் வெளியானது. இதிலும் ராணி முகர்ஜியே கதாநாயகியாக நடித்தார். முதல் பாகத்திற்கு கதை எழுதிய கோபி புத்ரனே இந்த இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதியதுடன் அவரே இந்த படத்தை இயக்கவும் செய்தார். இந்த படமும் முதல் பாகத்தை போல வெற்றி பெற்றது.
தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான கதையை இயக்குனர் கோபி புத்ரனே தற்போது எழுதி வருகிறார். இதிலும் ராணி முகர்ஜி கதாநாயகியாக நடிக்க, பிரபல தயாரிப்பாளரும் மற்றும் ராணி முகர்ஜியின் கணவருமான ஆதித்யா சோப்ராதயாரிக்க இருக்கிறார். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.