அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? | அபார்ட்மென்ட் வாங்கத் தவிக்கும் '3 பிஹெச்கே', அதைவிட்டு போகச் சொல்லும் 'பறந்து போ'!! | டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை |
கடந்த 2014 ல் ஹிந்தியில் வெளியாகி அதிரடி வெற்றி பெற்ற படம் 'மர்தாணி'. பெண்களை மையப்படுத்தி அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி இருந்த இந்த படத்தில் கதாநாயகியாக ராணி முகர்ஜி நடித்திருந்தார். பிரதீப் சர்கார் இயக்க, இதன் கதையை கோபி புத்ரன் என்பவர் எழுதியிருந்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் மர்தாணி-2 என்கிற பெயரில் 2019ம் வருடம் வெளியானது. இதிலும் ராணி முகர்ஜியே கதாநாயகியாக நடித்தார். முதல் பாகத்திற்கு கதை எழுதிய கோபி புத்ரனே இந்த இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதியதுடன் அவரே இந்த படத்தை இயக்கவும் செய்தார். இந்த படமும் முதல் பாகத்தை போல வெற்றி பெற்றது.
தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான கதையை இயக்குனர் கோபி புத்ரனே தற்போது எழுதி வருகிறார். இதிலும் ராணி முகர்ஜி கதாநாயகியாக நடிக்க, பிரபல தயாரிப்பாளரும் மற்றும் ராணி முகர்ஜியின் கணவருமான ஆதித்யா சோப்ராதயாரிக்க இருக்கிறார். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.