லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி | காந்தாரா படப்பிடிப்பில் ஆற்றில் மூழ்கி துணை நடிகர் உயிரிழப்பு | எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம் | ரெட்ரோ படப்பிடிப்பில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மம்முட்டி | கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட 'குங்குனாலோ' செயலி | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நடிக்கிறாரா சமந்தா? அவரே வெளியிட்ட தகவல் | பெயரை மாற்ற போகிறாரா தெலுங்கு நடிகர் நானி? | விஜய் பிறந்தநாளில் 'ஜனநாயகன்' அறிமுக டீசர் வெளியாகிறது? |
கடந்த 2014 ல் ஹிந்தியில் வெளியாகி அதிரடி வெற்றி பெற்ற படம் 'மர்தாணி'. பெண்களை மையப்படுத்தி அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி இருந்த இந்த படத்தில் கதாநாயகியாக ராணி முகர்ஜி நடித்திருந்தார். பிரதீப் சர்கார் இயக்க, இதன் கதையை கோபி புத்ரன் என்பவர் எழுதியிருந்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் மர்தாணி-2 என்கிற பெயரில் 2019ம் வருடம் வெளியானது. இதிலும் ராணி முகர்ஜியே கதாநாயகியாக நடித்தார். முதல் பாகத்திற்கு கதை எழுதிய கோபி புத்ரனே இந்த இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதியதுடன் அவரே இந்த படத்தை இயக்கவும் செய்தார். இந்த படமும் முதல் பாகத்தை போல வெற்றி பெற்றது.
தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான கதையை இயக்குனர் கோபி புத்ரனே தற்போது எழுதி வருகிறார். இதிலும் ராணி முகர்ஜி கதாநாயகியாக நடிக்க, பிரபல தயாரிப்பாளரும் மற்றும் ராணி முகர்ஜியின் கணவருமான ஆதித்யா சோப்ராதயாரிக்க இருக்கிறார். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.