இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை |

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த பல வருடங்களாகவே உடல்நலமின்றி இருக்கிறார். கடந்த 18ம் தேதி நுரையீரலில் சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 6 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கமான சிகிச்சை பெற்று வருவதாக விஜயகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தொடர் சிகிச்சை காரணமாக விஜயகாந்த் பற்றி தவறான வதந்திகள் பரவி வந்தது. இதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: நடிகர் விஜயகாந்த், காய்ச்சல் காரணமாக கடந்த 18ம் தேதி மியாட்-ல் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகளும் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்கு பிறகு அவர் வீடு திரும்பி, தனது வழக்கமான நடவடிக்கைகளை தொடங்குவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.