'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛துருவ நட்சத்திரம்'. 5 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து ஒருவழியாக நாளை(நவ., 24) வெளிவருவதாக ஒரு மாதத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் படம் வெளியீட்டில் சிக்கல் நீடித்து வந்தது.
இந்நிலையில் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சிம்புவை வைத்து ஒரு படம் இயக்குவதாக கூறி ஒப்பந்தம் போட்டு முன் பணமாக ரூ.2.40 கோடி பெற்றுள்ளார் கவுதம் மேனன். ஆனால் படத்தை எடுக்கவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் இந்நிறுவனம் கவுதம் மேனன் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. தங்களுக்கு தர வேண்டிய பணத்தை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க கோரிக்கை வைத்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கவுதம் மேனன் தரப்பில் ஆஜரான வக்கீல் பணத்தை திருப்பி தராமல் படத்தை வெளியிட மாட்டோம் என உறுதி அளித்தார். இதையடுத்து, நாளை காலை 10:30 மணிக்குள் 2 கோடி ரூபாயை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் திருப்பித்தர வேண்டும், இல்லையெனில் படத்தை வெளியிடக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.