இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛துருவ நட்சத்திரம்'. 5 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து ஒருவழியாக நாளை(நவ., 24) வெளிவருவதாக ஒரு மாதத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் படம் வெளியீட்டில் சிக்கல் நீடித்து வந்தது.
இந்நிலையில் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சிம்புவை வைத்து ஒரு படம் இயக்குவதாக கூறி ஒப்பந்தம் போட்டு முன் பணமாக ரூ.2.40 கோடி பெற்றுள்ளார் கவுதம் மேனன். ஆனால் படத்தை எடுக்கவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் இந்நிறுவனம் கவுதம் மேனன் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. தங்களுக்கு தர வேண்டிய பணத்தை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க கோரிக்கை வைத்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கவுதம் மேனன் தரப்பில் ஆஜரான வக்கீல் பணத்தை திருப்பி தராமல் படத்தை வெளியிட மாட்டோம் என உறுதி அளித்தார். இதையடுத்து, நாளை காலை 10:30 மணிக்குள் 2 கோடி ரூபாயை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் திருப்பித்தர வேண்டும், இல்லையெனில் படத்தை வெளியிடக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.