இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛துருவ நட்சத்திரம்'. 5 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து ஒருவழியாக நாளை(நவ., 24) வெளிவருவதாக ஒரு மாதத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் படம் வெளியீட்டில் சிக்கல் நீடித்து வந்தது.
இந்நிலையில் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சிம்புவை வைத்து ஒரு படம் இயக்குவதாக கூறி ஒப்பந்தம் போட்டு முன் பணமாக ரூ.2.40 கோடி பெற்றுள்ளார் கவுதம் மேனன். ஆனால் படத்தை எடுக்கவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் இந்நிறுவனம் கவுதம் மேனன் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. தங்களுக்கு தர வேண்டிய பணத்தை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க கோரிக்கை வைத்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கவுதம் மேனன் தரப்பில் ஆஜரான வக்கீல் பணத்தை திருப்பி தராமல் படத்தை வெளியிட மாட்டோம் என உறுதி அளித்தார். இதையடுத்து, நாளை காலை 10:30 மணிக்குள் 2 கோடி ரூபாயை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் திருப்பித்தர வேண்டும், இல்லையெனில் படத்தை வெளியிடக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.