பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
80களின் முன்னணி கதாநாயகியான நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவின் திருமணம் சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் நடைபெற்றது. திருமணப் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளிவந்து ரசிகர்களை, குறிப்பாக பெண்களை அதிகம் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
முகத்தைத் தவிர உடல் முழுவதும் தங்க நகைகளாலும், விலையுயர்ந்த பட்டுப் புடவையாலும் மணப் பெண்ணாக, தங்க தேவதை போல தங்கத்திலேயே ஜொலித்தார் கார்த்திகா. கேரளாவில் பெண்களுக்கு குறைந்த எடையுள்ள அதே சமயம் பிரம்மாண்டமான நகைகளை திருமணப் பரிசாகக் கொடுப்பது வழக்கம்.
சமூக வலைத்தளங்களில் இது போன்ற புகைப்படங்கள் பலவற்றைப் பார்த்திருக்கலாம். அவர்களே கழுத்திலிருந்து இடுப்பு வரையிலும் நீள நீளமான நகைகளை அணியும் போது பல கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள குடும்பத்து வாரிசான கார்த்திகா அணிந்து வந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
இது போன்ற நகைகள் நமது தமிழ்ப் பெண்கள் அணியும் காசுமாலையை விட மிகக் குறைவான எடை கொண்ட நகைகள்தான் என்று சொல்கிறார்கள். அவ்வளவு நகைகள் அணிந்து மணப் பெண்ணை அலங்காரம் செய்வதில் தங்களது குடும்பப் பெருமை வெளிப்படுவதாக கேரள குடும்பத்தினர் நினைப்பார்களாம்.
கார்த்திகாவின் நகைகளைப் பார்த்து வியந்தவர்களுக்கு இப்போது தெரிய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அந்த நகைகள் எத்தனை சவரன் இருக்கும், அவற்றின் மதிப்பு எவ்வளவு இருக்கும். புகைப்படங்களைக் கொடுத்து யாராவது நகை மதிப்பீட்டாளரிடம்தான் கேட்கவேண்டும்.