வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

'மீ டூ' என்ற விவகாரம் வந்த பிறகு பல நடிகைகள் அவர்களது வாழ்க்கையில் நடந்த சில பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி வெளிப்படையாக பேச ஆரம்பித்தார்கள். ஆனால், இன்னமும் சிலர் பேசத் தயங்கி வருகிறார்கள்.
'பிக் பாஸ் சீசன் 7' நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நடிகை விசித்ரா சில தினங்களுக்கு முன்பு ஒரு காலத்தில் தெலுங்குப் படம் ஒன்றில் அவருக்கு நேர்ந்த சில துரத்தல்கள், தொல்லைகள், அடிகள் பற்றி உணர்வுபூர்வமாகப் பேசியிருந்தார்.
அவர் நடித்த படத்தின் கதாநாயகன் அவரை படுக்கையறைக்கு அழைத்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார். படத்தின் பெயர், கதாநாயகன் யார் என அவர் குறிப்பிட்டுப் பேசவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் அந்த நடிகர் பாலகிருஷ்ணா, அந்தப் படம் 'பலேவடிவி பாசு' என்ற தெலுங்குப் படம் என எழுதி வருகிறார்கள்.
இதனால், கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம்தான் விஸ்வரூபமெடுத்துள்ளது. ஆனால், விசித்ரா குற்றச்சாட்டுக்கு தமிழ் சினிமாவிலிருந்து இதுவரை யாரும் ஆதரவுக் குரல் கொடுக்கவில்லை.
சமீபத்தில் த்ரிஷா பற்றி மன்சூரலிகான் பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து அவர் தற்போது போலீஸ் விசாரணை வரை சென்றுள்ளார். விசித்ரா விவகாரத்திற்கு 'மீ டூ'விற்காகக் குரல் கொடுத்து தமிழ் சினிமாவின் பெண் பிரபலங்களாவது குரல் கொடுப்பார்களா ?.