ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் |
'மீ டூ' என்ற விவகாரம் வந்த பிறகு பல நடிகைகள் அவர்களது வாழ்க்கையில் நடந்த சில பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி வெளிப்படையாக பேச ஆரம்பித்தார்கள். ஆனால், இன்னமும் சிலர் பேசத் தயங்கி வருகிறார்கள்.
'பிக் பாஸ் சீசன் 7' நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நடிகை விசித்ரா சில தினங்களுக்கு முன்பு ஒரு காலத்தில் தெலுங்குப் படம் ஒன்றில் அவருக்கு நேர்ந்த சில துரத்தல்கள், தொல்லைகள், அடிகள் பற்றி உணர்வுபூர்வமாகப் பேசியிருந்தார்.
அவர் நடித்த படத்தின் கதாநாயகன் அவரை படுக்கையறைக்கு அழைத்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார். படத்தின் பெயர், கதாநாயகன் யார் என அவர் குறிப்பிட்டுப் பேசவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் அந்த நடிகர் பாலகிருஷ்ணா, அந்தப் படம் 'பலேவடிவி பாசு' என்ற தெலுங்குப் படம் என எழுதி வருகிறார்கள்.
இதனால், கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம்தான் விஸ்வரூபமெடுத்துள்ளது. ஆனால், விசித்ரா குற்றச்சாட்டுக்கு தமிழ் சினிமாவிலிருந்து இதுவரை யாரும் ஆதரவுக் குரல் கொடுக்கவில்லை.
சமீபத்தில் த்ரிஷா பற்றி மன்சூரலிகான் பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து அவர் தற்போது போலீஸ் விசாரணை வரை சென்றுள்ளார். விசித்ரா விவகாரத்திற்கு 'மீ டூ'விற்காகக் குரல் கொடுத்து தமிழ் சினிமாவின் பெண் பிரபலங்களாவது குரல் கொடுப்பார்களா ?.