'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

நடிகை த்ரிஷா பற்றி பேட்டி ஒன்றில் ஆபாசமாகப் பேசிய நடிகர் மன்சூரலிகானுக்கு பல சினிமா பிரபலங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி கூட நேற்று அவரது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். தெலுங்கு ஹீரோவான அவரே தெரிவித்த பின்பும் இங்குள்ள தமிழ் ஹீரோக்கள் அது பற்றி எதுவும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்கள்.
'லியோ' படத்தின் கதாநாயகனாக விஜய், மற்ற முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் ஆகியோரும் இதுவரை தங்களது கண்டனங்களைப் பதிவு செய்யவில்லை. இவர்கள் அனைவருடனும் த்ரிஷா இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
நடிகர் சங்கம் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை விட்டுவிட்டதால் முன்னணி நடிகர்கள் அனைவரும் இந்த விவகாரத்தில் சிக்குவதைத் தவிர்க்கிறார்களா என்றும் தெரியவில்லை. நேற்று மன்சூரலிகான் அளித்த பேட்டியில் கூட நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், செயலாளர் விஷால் ஆகியோர் எனது தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றே தெரிவித்திருந்தார்.
தேசிய மகளிர் ஆணைய உத்தரவுப்படி தமிழக போலீசார் வழக்குப் பதிவு செய்த பின்பும் தமிழின் முன்னணி நடிகர்கள் எதுவும் பேசாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.




