உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் | 'டீசல்' படப்பிடிப்பில் ஹரிஷ் கல்யாணை அதிர வைத்த மீனவர் | கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகும் நிவின்பாலியின் 'சர்வம் மாயா' | உங்க பட ரிலீஸ் தேதியை மாற்ற முடியுமா லாலேட்டா ? ; ரிலீஸ் தேதியை அறிவிக்க நடிகரின் புதிய யுக்தி | 'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பை நிறைவு செய்த கன்னட நடிகர் துனியா விஜய் | ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' |
நடிகை த்ரிஷா பற்றி பேட்டி ஒன்றில் ஆபாசமாகப் பேசிய நடிகர் மன்சூரலிகானுக்கு பல சினிமா பிரபலங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி கூட நேற்று அவரது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். தெலுங்கு ஹீரோவான அவரே தெரிவித்த பின்பும் இங்குள்ள தமிழ் ஹீரோக்கள் அது பற்றி எதுவும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்கள்.
'லியோ' படத்தின் கதாநாயகனாக விஜய், மற்ற முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் ஆகியோரும் இதுவரை தங்களது கண்டனங்களைப் பதிவு செய்யவில்லை. இவர்கள் அனைவருடனும் த்ரிஷா இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
நடிகர் சங்கம் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை விட்டுவிட்டதால் முன்னணி நடிகர்கள் அனைவரும் இந்த விவகாரத்தில் சிக்குவதைத் தவிர்க்கிறார்களா என்றும் தெரியவில்லை. நேற்று மன்சூரலிகான் அளித்த பேட்டியில் கூட நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், செயலாளர் விஷால் ஆகியோர் எனது தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றே தெரிவித்திருந்தார்.
தேசிய மகளிர் ஆணைய உத்தரவுப்படி தமிழக போலீசார் வழக்குப் பதிவு செய்த பின்பும் தமிழின் முன்னணி நடிகர்கள் எதுவும் பேசாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.