எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாகப் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழ் சினிமாவில் உள்ள பல சங்கங்கள், சினிமா பிரபலங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்கள். பிறமொழிகளில் உள்ள கலைஞர்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்தப் பிரச்னை குறித்து, தேசிய மகளிர் ஆணையம், தானாக முன்வந்து விசாரணையை துவக்கியது. பெண்ணை அவமதிக்கும் வகையில், அநாகரிகமாக பேசியது தொடர்பாக, மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் மகளிர் போலீசார் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.