ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு இருபது ஹீரோ நடிகர்கள் வரை தொடர்ச்சியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நடித்து வெளியாகும் படங்களில் ஒரு சில படங்கள்தான் வெற்றி பெறுகின்றன, சில படங்கள் தோல்வியடைகின்றன. வெற்றி, தோல்வி பொறுத்துதான் அடுத்த படங்களின் வாய்ப்புகளும், சம்பளமும் அமைகின்றன.
இந்நிலையில் சில நடிகர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகும் சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். முன்னணி நடிகர்களைப் பொறுத்தவரையில் விஜய் சேதுபதி ஹிந்தியில், “பார்சி” சீரிஸில் நடித்தார். அத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆர்யா 'த வில்லேஜ்' என்ற சீரிஸில் முதல் முறையாக நடித்துள்ளார். இத்தொடர் இந்த வாரம் நவம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளது.
அருண் விஜய் 2022ல் வெளிந்த 'தமிழ் ராக்கர்ஸ்' சீரிஸில் நடித்தார். ஜெய் நடிப்பில் 'லேபில்' சீரிஸ் கடந்த வாரம் வெளியானது. அதர்வா நடித்த 'மத்தகம்' சீரிஸ் ஆகஸ்ட் மாதம் வெளியானது. விமல் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'விலங்கு' சீரிஸ் பரபரப்பான வரவேற்பைப் பெற்றது.
குறிப்பிட்ட இடைவெளியில் இந்த சீரிஸ்கள் வந்தாலும் சினிமாவைப் போன்ற வரவேற்பைப் பெறாமல் இருக்கின்றன. டாப் நடிகர்கள் அல்லது டாப் இயக்குனர்கள் யாராவது இதற்கு முன்பு எடுத்தது போன்ற குட்டிக் கதைகள் இல்லாமல் முழு நீள சீரிஸ்கள் எடுத்தால் மட்டுமே அந்த ரசிகர்களைக் கவர வாய்ப்புள்ளது.