படத்திலிருந்து நீக்கபட்டது குறித்து வருத்தப்பட்ட மகிமா நம்பியார் | சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர் | தனது வீட்டின் பணி பெண்ணிற்கு உதவிய அல்லு அர்ஜுன் | நித்யா மேனனுக்கு விட்டுக் கொடுத்த ஜெயம் ரவி | சிம்பு 48வது படம் : தேசிங்கு பெரியசாமியை வாழ்த்திய ரஜினி | இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி | மறைந்த பிரதமர் இந்திரா உடன் உரையாடிய கங்கனா | மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018' பட இயக்குனர் | இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர் | தடைகளை தாண்டி 'துருவ நட்சத்திரம்' வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை |
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு இருபது ஹீரோ நடிகர்கள் வரை தொடர்ச்சியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நடித்து வெளியாகும் படங்களில் ஒரு சில படங்கள்தான் வெற்றி பெறுகின்றன, சில படங்கள் தோல்வியடைகின்றன. வெற்றி, தோல்வி பொறுத்துதான் அடுத்த படங்களின் வாய்ப்புகளும், சம்பளமும் அமைகின்றன.
இந்நிலையில் சில நடிகர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகும் சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். முன்னணி நடிகர்களைப் பொறுத்தவரையில் விஜய் சேதுபதி ஹிந்தியில், “பார்சி” சீரிஸில் நடித்தார். அத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆர்யா 'த வில்லேஜ்' என்ற சீரிஸில் முதல் முறையாக நடித்துள்ளார். இத்தொடர் இந்த வாரம் நவம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளது.
அருண் விஜய் 2022ல் வெளிந்த 'தமிழ் ராக்கர்ஸ்' சீரிஸில் நடித்தார். ஜெய் நடிப்பில் 'லேபில்' சீரிஸ் கடந்த வாரம் வெளியானது. அதர்வா நடித்த 'மத்தகம்' சீரிஸ் ஆகஸ்ட் மாதம் வெளியானது. விமல் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'விலங்கு' சீரிஸ் பரபரப்பான வரவேற்பைப் பெற்றது.
குறிப்பிட்ட இடைவெளியில் இந்த சீரிஸ்கள் வந்தாலும் சினிமாவைப் போன்ற வரவேற்பைப் பெறாமல் இருக்கின்றன. டாப் நடிகர்கள் அல்லது டாப் இயக்குனர்கள் யாராவது இதற்கு முன்பு எடுத்தது போன்ற குட்டிக் கதைகள் இல்லாமல் முழு நீள சீரிஸ்கள் எடுத்தால் மட்டுமே அந்த ரசிகர்களைக் கவர வாய்ப்புள்ளது.