படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
நடிகை ஹன்சிகா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள தெலுங்கு படம் 'மை நேம் இஸ் ஸ்ருதி'. ஸ்ரீனிவாஸ் ஓம்கார் இயக்கி உள்ளார். முரளி சர்மா, ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி உள்ளது.
ஹன்சிகா கூறியிருப்பதாவது: தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தியதால் தெலுங்கு படம் பற்றி கவனிக்கவில்லை. அங்கிருந்தும் எனக்கான ஸ்கிரிப்டும் வரவில்லை என்பதும் உண்மை. இந்த படத்தின் கதையை இயக்குனர் சொன்னதும் நடிக்க பயந்தேன். மனிதர்களை கடத்தி அவர்களின் தோலை வியாபாரம் செய்வார்களா என்ற சந்தேகம் இருந்தது. எனது தாய் அடிப்படையில் மருத்துவர் என்பதால் அவர் அது உண்மைதான். அது இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றார். அதன் பிறகே நடித்தேன்.
படத்தில் நான் ஒரு விளம்பர ஏஜென்சி நடத்தும் பெண். சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த கடத்தல் கும்பலிடம் சிக்கி விடுகிறேன். அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறேன். அந்த கும்பலை எப்படி சமூகத்துக்கு அடையாளம் காட்டுகிறேன் என்பதுதான் படத்தின் கதை. எனக்கு ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. அது ஹீரோக்கள் போடும் சண்டை போன்று இருக்காது. என் வயது கொண்ட எனது வலிமை கொண்ட ஒரு பெண் எப்படி சண்டையிடுவாளோ அதுபோன்று யதார்த்தமாக இருக்கும். என்றார்.