அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படம் டிச.,15ல் வெளியாகும் என முதலில் அறிவித்து, பின்னர் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறவுள்ள 'வறண்ட மண்ணும் குருதி குடிக்கும்..புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும்.. நாந்தான்டா நீதி.. நாந்தான்டா நீதி' என்ற பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.