என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தீபாவளி வந்த பின் அடுத்த இரண்டு வாரங்களுக்கு முக்கியமான படங்களை வெளியிட மாட்டார்கள். தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் எப்படியாவது இரண்டு வாரங்களாவது தாக்குப் பிடித்து ஓடிவிடும் என்ற நம்பிக்கைதான் அதற்குக் காரணம். தீபாவளிக்கு வெளியான நான்கு படங்களில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் மட்டும் எப்படியாவது இரண்டு வாரத்தைத் தொட்டுவிடும் என எதிர்பார்க்கிறார்கள்.
இந்த வார வெள்ளிக்கிழமையான நவம்பர் 17ம் தேதி முக்கிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இரண்டு சிறிய படங்கள் மட்டும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாஷிகா ஆனந்த், அவிதேஜ் ரெட்டி நடித்துள்ள 'சைத்ரா' படமும், 'அம்புநாடு ஒம்பது குப்பம்' படமும் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களின் அறிவிப்பைத் தவிர வேறு படங்களின் அறிவிப்பு வரவில்லை.
அதே சமயம் நவம்பர் 24ம் தேதி, டிசம்பர் 1ம் தேதிகளில் சில முக்கிய படங்கள் வெளியாக உள்ளன.