'தி கோட்', விஜய்யின் விஎப்எக்ஸ் பணிகள் நிறைவு | கமலின் தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | எல்லா படங்களுக்கும் கதாநாயகி அவசியம் இல்லை : நிகிலா விமல் | ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்ட பிரபாஸ் | மீண்டும் ஷாரூக்கான் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | ஆளே இல்லாத நடிகர் சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு : அமைச்சரின் பரிந்துரையில் கட்டணமின்றி சலுகை | இளையராஜாவை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் | ஆவேசம் பஹத் பாசில் பாணியில் ரிலீஸ் தேதியை அறிவித்த விஸ்வக் சென் | சூர்யா படத்தில் கதாநாயகியாக இணையும் பூஜா ஹெக்டே | புஷ்பா 2 வில் இருந்து விலகிய எடிட்டர் ஆண்டனி ரூபன் ? |
தற்போது ஞானவேல் இயக்கி வரும் தனது 170வது படத்தின் நடித்து வரும் ரஜினிகாந்த் அதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 171வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்க உள்ளது. மேலும், ஜெயிலர் படத்தில் நடிப்பதற்கு முன்பு சில இளவட்ட இயக்குனர்களிடத்தில் கதை கேட்டார் ரஜினி. அவர்களில் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் என்ற படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி மற்றும் டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அதையடுத்து இவர்கள் இருவரின் இயக்கத்திலும் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் ரஜினியோ, நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தில் நடிக்க தொடங்கி விட்டார். இந்த நிலையில் ரஜினியிடத்தில் தான் கூறிய அதே சரித்திர கதையை சிம்புவிடத்தில் கூறி ஓகே செய்துவிட்டார் தேசிங்கு பெரியசாமி. அந்த படம் தான் தற்போது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்புவின் 48வது படமாக உருவாகப் போகிறது. அதோடு இந்த படத்தை மிகப் பிரமாண்டமாக 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.