நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
தமிழில் நாளை நமதே, நீயா போன்ற படங்களில் நடித்தவரும், தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகருமான சந்திர மோகன்(80) மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் காலமானார்.
தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்தவர் சந்திரமோகன். ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1943, மே 23ல் பிறந்தார் சந்திரமோகன். ரங்குலா ரத்னம் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்தார். தமிழில் எம்ஜிஆர் நடித்த நாளை நமதே படத்தில் அவரது சகோதரராக நடித்தார். தொடர்ந்து கமலின் நீயா படத்தில் இச்சாதாரியாக நடித்த ஸ்ரீபிரியாவின் காதலனாக நடித்தார். பின்னர் ஒருகட்டத்திற்கு மேல் குணச்சித்ர வேடத்தில் நடித்து வந்தார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட சந்திரமோகன் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பு காரணமாக இன்று(நவ., 11) காலை 9:45 மணியளவில் காலமானார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது இறுதிச்சடங்கு திங்கள்கிழமை அன்று ஐதராபாத்தில் நடைபெறுகிறது.