56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு | “என் மகள் எனக்கு மூன்றாம் மனுஷி தான்.. அஞ்சு பைசா கூட தரமாட்டேன்” ; ஸ்வேதா மேனன் ஓபன் டாக் | எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சார்ஜா, ரச்சிதா ராம் ஜோடி | 'விலாயத் புத்தா' கதையும் 'புஷ்பா' கதையும் ஒன்றா ? பிரித்விராஜ் விளக்கம் | அதிதி ராவ் ஹைதரி பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி ; நடிகை எச்சரிக்கை | தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! |

தமிழில் நாளை நமதே, நீயா போன்ற படங்களில் நடித்தவரும், தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகருமான சந்திர மோகன்(80) மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் காலமானார்.
தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்தவர் சந்திரமோகன். ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1943, மே 23ல் பிறந்தார் சந்திரமோகன். ரங்குலா ரத்னம் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்தார். தமிழில் எம்ஜிஆர் நடித்த நாளை நமதே படத்தில் அவரது சகோதரராக நடித்தார். தொடர்ந்து கமலின் நீயா படத்தில் இச்சாதாரியாக நடித்த ஸ்ரீபிரியாவின் காதலனாக நடித்தார். பின்னர் ஒருகட்டத்திற்கு மேல் குணச்சித்ர வேடத்தில் நடித்து வந்தார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட சந்திரமோகன் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பு காரணமாக இன்று(நவ., 11) காலை 9:45 மணியளவில் காலமானார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது இறுதிச்சடங்கு திங்கள்கிழமை அன்று ஐதராபாத்தில் நடைபெறுகிறது.