முத்தையா இயக்கத்தில் பிரபு, கார்த்திக் மகன்கள் | 'மகாராஜா' - விஜய் சேதுபதியின் 50வது படம் தந்த திருப்பம் | லண்டனில் படமாகும் டாக்சிக் | ‛சூரரைப்போற்று' ஹிந்தி ரீ-மேக்கான ‛சர்பிரா' ரிலீஸ் தேதி அறிவிப்பு | மீண்டும் கெட்ட வார்த்தை பேசி ரசிகர்களின் கண்டனத்திற்கு ஆளான மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | அமீர்கான் மகனின் அறிமுக படத்திற்கு நீதிமன்றம் தடை | ரூ.90 லட்சம் மோசடி நடிகை ஷில்பா மீது வழக்கு | கமலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற தலவன் படக்குழு | ரவீனாவுக்கு அடித்த ஜாக்பாட் | எதிர்நீச்சல் குழுவினருக்கு நினைவுப்பரிசு கொடுத்த திருசெல்வம் |
சினிமா நடிகை டெல்னா டேவிஸ் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் அன்பே வா தொடரில் மெயின் ரோலில் நடித்து வருகிறார். ஆனால், சில தினங்களுக்கு முன் ஸ்ரீகோபிகா என்ற இரண்டாவது நாயகியை சீரியலுக்குள் அறிமுகப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவத்தை திரைக்கதையில் அதிகப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் பூமிகா கதாபாத்திரம் இறந்துவிடுவது போல் காண்பித்தனர். இதன் காரணமாக டெல்னா டேவிஸ் சீரியலை விட்டு விலகுவதாக செய்திகள் கசிந்தது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள டெல்னா டேவிஸ், 'அன்பே வா தொடரிலிருந்து விடைபெறுவதை நினைக்கும் போது இதயம் உணர்ச்சிகளாலும், நன்றியாலும் நிரம்பி வழிகிறது. இதுவெறும் குட்பை மட்டுமல்ல. உங்கள் அன்பிற்கும் நீங்கள் கொடுத்த அனைத்து நினைவுகளுக்கும் நன்றி. என் வாழ்வில் ஒரு அத்தியாயமாக அன்பே வா தொடரின் அழகான நினைவுகள் இருக்கும். சைனிங் ஆப் பூமிகா' என்று பதிவிட்டுள்ளார்.