சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சினிமாவில் சிறு சிறு ரோல்களில் நடித்து பின் சின்னத்திரையில் ஹீரோயினாக களமிறங்கினார் பிரியங்கா நல்காரி. தமிழில் இவர் நடித்த ரோஜா சீரியலால் புகழின் உச்சத்திற்கு சென்றார். தொடர்ந்து ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் ஹீரோயினாக கமிட்டானார். தனது நீண்டநாள் காதலரை மலேசியாவுக்கு சென்று திருமணம் செய்து கொண்ட பிரியங்கா கணவருக்காக நடிப்பதை கைவிடுவதாக சொன்னார். பின் கணவரை பிரிந்து வாழ்ந்த சில நாட்களில் மீண்டும் ஜீ தமிழில் நளதமயந்தி தொடரில் ஹீரோயினாகும் வாய்ப்பை பெற்றார். ஆனால், காதல் கணவருடன் மீண்டும் சேரவே அந்த தொடரிலிருந்தும் விலகி தற்போது மலேசியாவில் புதிதாக ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதுதொடர்பாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு 'தொழிலதிபராக உணர்கிறேன்' என பெருமையாக பதிவிட்டுள்ளார்.