பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
'நாயகன்' படத்திற்குப் பிறகு கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ள படத்தின் வேலைகள் ஆரம்பமாகிவிட்டன. கமல்ஹாசனின் 234வது படமாக உருவாக உள்ள அப்படம் பற்றிய அதிகாரப்பூர்வத் தகவலையும் வெளியிட்டுவிட்டார்கள்.
படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள். ஆனால், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா 12 கோடி சம்பளம் கேட்டதாகவும் அதற்கு சம்மதித்து ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.
அது உண்மை என்றால் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகை என்ற பெயரைப் பெறுவார் நயன்தாரா. அதிகபட்சமாக 5 கோடி சம்பளம் வாங்கி வந்த நயன்தாரா 'ஜவான்' வெற்றிக்குப் பிறகு சம்பளத்தை இரு மடங்காக உயர்த்திவிட்டாராம். 'ஜவான்' படம் மூலம் நயன்தாரா ஹிந்தியிலும் பிரபலமாகிவிட்டதால் கமல்ஹாசன் 234 படத்தின் பான் இந்தியா வெளியீட்டிற்கு அது உதவும் என்பதும் ஒரு காரணம் என்கிறார்கள்.